கோவை, சேலம், திருவண்ணாமலை, நாகை, கடலூர் மாவட்டங்களில் அதிகம் கிருமி பரவும் அபாயம்

கோவை, சேலம், திருவண்ணாமலை, நாகை, கடலூர் மாவட்டங்களில் அதிகம் கிருமி பரவும் அபாயம்

2 mins read

தமிழக அரசு: இடைத்தேர்தல் நடத்துவதற்கு வாய்ப்பில்லை

சென்னை: தமி­ழ­கத்­தில் திரு­வொற்­றி­யூர், குடி­யாத்­தம் சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளுக்கு இடைத்­தேர்­தல் நடத்­து­வ­தற்கு வாய்ப்­பில்லை என்று தமி­ழக தலை­மைச் செய­லா­ளர் கே. சண்முகம் தெரி­வித்­துள்­ளார்.

"மாநிலம் முழு­வ­தும் ஊர­டங்கு கட்­டுப்­பா­டு­களில் தளர்­வு­கள் அறி­விக்­கப்­பட்­டுள்ள சூழ்­நி­லை­யில், கோவை, சேலம், திரு­வண்­ணா­மலை, நாகை, கட­லூர் ஆகிய ஐந்து மாவட்ட மக்கள் அடுத்த சில நாட்­களில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் அதிக அளவில் பாதிப்புக்கு ஆளாகும் அச்சம் உள்ளது.

"தற்­போ­துள்ள தொற்று பாதிப்பு எண்­ணிக்­கை­யைக் கொண்டு கணித்­தால் அதற்­கான வாய்ப்­பு­கள் அதி­கம் இருப்பது புலனாகிறது.

"இதன்காரணமாக, கிருமிப் பரவல் அச்சத்தை எதிர்கொள்ளும் வகையில் ஐந்து மாவட்டங்களிலும் கூடுதல் மருத்துவப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன," என்று சண்முகம் மேலும் ெதரிவித்துள்ளார்.

இந்­தி­யா­வில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப் பட்டுள்ள மாநி­லங்­களில் தமி­ழ­க­மும் முக்­கிய ஒன்­றாக உள்­ளது. இம்­மா­நி­லத்­தில் இத்தொற்றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளிள் எண்­ணிக்கை விரைவில் ஐந்து லட்­சத்தை எட்ட உள்­ளது.

இந்­நி­லை­யில், ெதாலைக்­காட்சி ஒன்­றுக்கு தலை­மைச் செய­லா­ளர் சண்முகம் பேட்டி அளித்தபோது, "அதிகரித்துவரும் கொவிட்-19 தொற்று கார­ண­மாக தமி­ழ­கத்­தில் இப்­போதைக்கு இடைத்­தோ்­தல் நடத்தவேண்­டாம் என தோ்தல் ஆணை­யத்­துக்கு கடி­தம் எழு­தி­யுள்ளேன்.

"இந்த கால­கட்­டத்­தில் இடைத்­தேர்­தல் தேவை­யற்­றது. இது­பற்றி ஏற்­கெனவே இந்­திய தேர்­தல் ஆணை­யத்­துக்கு தமி­ழக அரசும் கடி­தம் எழு­தி­யுள்­ளது.

"மாநிலம் முழு­தும் ஊர­டங்­கில் தளர்­வு­கள் அறி­விக்­கப்­பட்டுள்ள சூழ்­நி­லை­யில், அடுத்த 10 நாட்­களில் குறிப்பிட்ட சில மாவட்­டங்­களில் தீவி­ரம் அடை­யும் பாதிப்பை எதிர்கொள்ள மருத்­துவக் கட்­ட­மைப்­பு­களை மேம்­ப­டுத்த உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

"தமி­ழ­கத்­தில் இன்­னும் ஆறேழு மாதங்­களில் சட்­ட­மன்றத் தேர்­தல் நடை­பெற உள்­ள­தால் திரு­வொற்றியூர், குடி­யாத்­தம் தொகு­தி­க­ளுக்கு இடைத்­தேர்­தல் நடத்­தும் திட்­ட­மில்லை," என்று கூறினார்.

ஐந்து மாவட்டங் களில் கொரோனா கிருமி பரவும் வேகம் அடுத்த 10 அல்லது 15 நாட்களில் புதிய உச்சம் தொடும் அச்சமுள்ளது. இதனால், மருத்­துவக் கட்­ட ­மைப்­பு­களை மேம்ப­டுத்த உத்­த­ரவி­டப்­பட்­டுள்­ளது.

தமி­ழக தலை­மைச் செய­லா­ளர்

கே.சண்­மு­கம்