தலைவர்களுக்கு தொற்றில்லை; மூன்று எம்எல்ஏக்கள் பாதிப்பு

தலைவர்களுக்கு தொற்றில்லை; மூன்று எம்எல்ஏக்கள் பாதிப்பு

1 mins read
3f8b7f95-f14d-482d-96af-ec31c030be85
பொன்.சரஸ்வதி, தூசி கே.மோகன், எஸ்.பி.சண்முகநாதன்.படங்கள்: ஊடகம் -

சென்னை: 14ஆம் தேதி சட்­ட­மன்­றம் கூடு­வதை முன்­னிட்டு நடத்­தப்­பட்ட கொரோனா பரி­சோதனையில் ஆளுங்­கட்சி, எதிர்க்­கட்­சித் தலை­வர்­க­ளுக்கு கொரோனா தொற்­றில்லை என்­பது உறு­தி­யாகி உள்­ளது. ஆனால், அதே சம­யத்­தில் மூன்று அதி­முக எம்­எல்­ஏக்­க­ளுக்கு இத்தொற்று இருந்­தது உறு­தி­யானது.

மூன்று நாட்­க­ளுக்கு தொடர உள்ள தமி­ழக சட்­ட­மன்­றக் கூட்­டம் இன்று திங்­கள் முதல் சென்னை கலை­வா­ணர் அரங்­கத்­தில் நடைபெற உள்ளது.

இந்­நி­லை­யில், இக்­கூட்­டத்­தில் பங்­கேற்கும் அனை­வ­ருக்­கும் கிருமி பரி­சோ­தனை நடந்தது. இது­கு­றித்து சுகா­தா­ரத் துறை அதி­கா­ரி­கள் கூறு­கை­யில், "தமி­ழக முதல்­வர் பழ­னி­சாமி, துணை முதல்­வர் ஓ.பன்­னீர் செல்­வம், திமுக தலை­வர் மு.க.ஸ்டா­லின் ஆகி­யோ­ருக்கு கிருமித்தொற்று பாதிப்பில்லை.

"ஆனால், தூத்­துக்­குடி மாவட்­டம், ஸ்ரீவை­குண்­டம் தொகுதி அதி­முக எம்­எல்ஏ எஸ்.பி. சண்­மு­க­நா­தன், நாமக்­கல் மாவட்­டம், திருச்செங்­கோடு தொகுதி அதி­முக எம்­எல்ஏ பொன்.சரஸ்­வதி, திரு­வண்­ணா­மலை மாவட்­டம் செய்­யாறு தொகுதி அதி­முக எம்­எல்ஏ தூசி கே.மோகன் ஆகி­யோ­ருக்கு தொற்று பாதிப்பு உறு­தி­யாகி உள்­ளது. மூவ­ரும் சென்­னை­யில் உள்ள மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்­சை பெறுகின்றனர்.

இந்நிலை­யில், முதல்­வ­ரின் அலு­வ­லக ஊழி­யர் ஒரு­வ­ருக்­கும் மேலும் ஒருவருக்கும் இப்பாதிப்பு இருப்­பது கண்­ட­றி­யப்பட்­டு சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கிறது," என்று அவர்­கள் கூறினர்.