கீழடி 6ஆம் கட்ட அகழாய்வில் உறை கிணறு கண்டுபிடிப்பு

கீழடி 6ஆம் கட்ட அகழாய்வில் உறை கிணறு கண்டுபிடிப்பு

1 mins read
79a78744-198b-44d5-92d2-2bbc6cb85ed1
கண்டுபிடிக்கப்பட்ட உறை கிணறு. படம்: ஊடகம் -

சிவ­கங்கை: கீழ­டி­யில் ஆறாம் கட்ட அகழ்­வா­ராய்ச்­சி­யில் மேலும் ஒரு உறைகிணறு கண்­டுபிடிக்கப் பட்டுள்­ளது. ஏற்ெகனவே ஐந்து அடுக்கு உறை கிண­று­கள் கண்­ட­றி­யப்­பட்ட நிலை­யில், தற்­போது ஈரடுக்கு உறை­ கி­ணற்றைக் கண்டு­பி­டித்­துள்­ள­னர்.

கீழ­டி­யில் ஆறாம் கட்ட அக­ழாய்வு, கருப்­பையா என்­ப­வ­ரின் நிலத்­தில் நடந்து வரு­கிறது. ஏற்ெகனவே 18 குழி­கள் தோண்­டப்­பட்டு உலை­க­லன், விலங்­கின் எலும்பு, எடைக் கற்­கள், பாசி­கள், தரைத் தளம், இணைப்புப் பானை­களைக் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து மேலும் இரு குழி­கள் தோண்­டும் பணியின் போது, ஒரு குழி­யில் இரு அடுக்­கு­கள் கொண்ட உறை­கிணறு கண்­ட­றி­யப்­பட்­டது. ஆறாம் கட்ட அக­ழாய்வுப் பணி­கள் நிறைவுபெற உள்ள நிலை­யில் இந்த உறை கிணறு கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.