சிவகங்கை: கீழடியில் ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் மேலும் ஒரு உறைகிணறு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ஏற்ெகனவே ஐந்து அடுக்கு உறை கிணறுகள் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது ஈரடுக்கு உறை கிணற்றைக் கண்டுபிடித்துள்ளனர்.
கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு, கருப்பையா என்பவரின் நிலத்தில் நடந்து வருகிறது. ஏற்ெகனவே 18 குழிகள் தோண்டப்பட்டு உலைகலன், விலங்கின் எலும்பு, எடைக் கற்கள், பாசிகள், தரைத் தளம், இணைப்புப் பானைகளைக் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து மேலும் இரு குழிகள் தோண்டும் பணியின் போது, ஒரு குழியில் இரு அடுக்குகள் கொண்ட உறைகிணறு கண்டறியப்பட்டது. ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவுபெற உள்ள நிலையில் இந்த உறை கிணறு கண்டறியப்பட்டுள்ளது.