தமிழகப் பல்கலைக் கழகங்கள் இறுதியாண்டு மாண வர்களுக்கான பருவத் தேர்வை இணையம் வழி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளன.
செப்டம்பர் 24 முதல் 29ஆம் தேதி வரை, ஒரேநாளில் நான்கு வெவ்வேறு விதமான பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெற உள்ளன.
இணையம் வழி நடத்தப்பட உள்ள அண்ணா பல்கலைக்கழ கத்தின் இறுதிப் பருவத் தேர்வை எழுதுவதற்கு மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் மட்டுமே கால அவகாசம் தரப்பட்டு உள்ளது.
வழக்கமாக இந்த தேர்வுகள் மூன்று மணி நேரம் நடத்தப்படும்.
“கேள்விக்கான நான்கு விடை களில் ஒரு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதும் வகையில் வினாத்தாள் வடிவமைக்கப் பட்டிருக்கும்,” என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இணையம் வழி ஒன்றரை மணி நேரம் தேர்வு நடக்கும் என்றும் மாணவர்கள் 18 பக்கங்களுக்கு மிகாமல் கேள்வி களுக்கான பதிலை எழுதி இணை யத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என்றும் சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
“பதிவேற்றம் செய்யமுடியாத மாணவர்கள், விரைவு தபால் மூலம் கல்லூரி முதல்வருக்கு கிடைக்கும் வகையில் அதை அனுப்பிவைக்க வேண்டும்,” என்று சென்னை பல்க லைக்கழகம் அறிவுறுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா கிருமிப் பரவலின் தீவிரம் காரண மாக இறுதியாண்டு மாணவர் களைத் தவிர மற்ற பருவத் தேர்வு களை எழுதும் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி என்று அறிவிக்கப் பட்டது.
இந்நிலையில், கிருமித் தொற்றின் தாக்கம் இருந்தாலும், இறுதியாண்டு கல்லூரி பருவத் தேர்வை கண்டிப்பாக நடத்தியே ஆகவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, மதுரை காமராஜர், மனோன்மணியம் சுந்தரனார், காரைக்குடி அழகப்பா உள்ளிட்ட பல்கலைக்கழகங்களும் சென்னை பல்கலைக்கழகத்தின் அறிவிப்பையே பின்பற்ற உள்ளதாகவும் முன்னதாக தெரிவித்திருந்தன.
இந்நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு வீட்டில் இருந்தே தேர்வு நடத்தும் முறை கேலிக்கூத்தானது என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பால குருசாமி கடுமையாக விமர்சித் துள்ளார்.
விடைத்தாள்களை ஒப்படைக்க அதிக நேரம் இருப்பதால் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபட அதிகமான வழிகள் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பள்ளி அளவிலான மாணவர்களுக்கு நீட் போன்ற தேர்வுகள் சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு நடத்துவதில் என்ன சிக்கல் உள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.