40% பாடச் சுமையைக் குறைக்கும் பணி நிறைவு

40% பாடச் சுமையைக் குறைக்கும் பணி நிறைவு

1 mins read
192c1069-643d-4b20-a585-ef391973baf9
ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பாடத்­திட்­டத்தைக் குறைக்­கும் பணி நிறைவு பெற்­றுள்­ள­தாக பள்­ளிக்­ கல்­வித்­துறை சார்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. படம்: ஊடகம் -

சென்னை: பொது முடக்­கம் கார­ண­மாக தமி­ழ­கத்­தில் உள்ள பள்­ளி­கள், கல்­லூ­ரி­கள் மூடப்­பட்டுள்ளன. எப்போதுதான் திறக்கப்படும் என்பது இன்னும் கேள்விக் குறியாகவே உள்ள நிலை­யில், மாணவர்களுக்கு இணை­யம் வழி பாடங்­கள் நடத்­தப்­படுகின்­றன.

பள்­ளி­க­ளைத் திறக்­கா­மல் பாடங்­க­ளை­யும் நடத்­தா­மல் உள்ளதால், பாடத்­திட்ட சுமையைக் குறைக்க மாநில அரசு நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கிறது.

அதன்படி 10, 11, 12 ஆம் வகுப்பு மாண­வர்­க­ளுக்கு 30% பாடத்­திட்­டத்தைக் குறைக்­க­வும் இதர வகுப்பு மாண­வர்­க­ளுக்கு 40% பாடத்­திட்­டத்தைக் குறைக்­க­வும் கல்வி நிபு­ணர்­கள் குழு­வி­னர் பரிந்­துரை செய்துள்ளனர்.

இந்­நி­லை­யில், ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரை பாடத்­திட்­டத்தைக் குறைக்­கும் பணி நிறைவு பெற்­றுள்­ள­தாக பள்­ளிக்­கல்­வித்­துறை சார்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது­கு­றித்து விரை­வில் அதி­கா­ர­பூர்வ அறி­விப்பு வெளி­யாகும்.