சட்டமன்றத்தில் நேற்று பேசிய கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் மூன்று கால்நடை மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படுவதாக தெரிவித்தார்.
சேலம் மாவட்டம், தலைவாசலில் உலகத்தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா ரூபாய் 1,000 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது,
தேனி வீரபாண்டியில் ரூபாய் 254 கோடி முதலீட்டில் கால்நடை மருத்துவக் கல்லூரியும் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதி பண்ணைக்கிணற்றில் ரூபாய் 253 கோடி மதிப்பீட்டில் ஒரு கால்நடை மருத்துவக் கல்லூரியும் கட்டப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.