சென்னை ராயபுரத்தில் இருந்து கடத்தப்பட்ட பெண் குழந்தை ஒன்றை பத்து நாட்களுக்குப் பிறகு போலிசார் பத்திரமாக மீட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், நாவலூரில் இருந்து குழந்தை மர்ஜினாவை மீட்ட போலிசார், அதனைப் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
பத்து நாட்கள் கழித்து குழந்தையைக் கண்ட மகிழ்ச்சியில் கண்ணீரோடு ஓடிவந்து அதனைத் தூக்கிக் கொஞ்சிய தாய் போலிசாருக்கு நன்றி கூறினார்.
சென்னை ராயபுரத்தில் கொத்தனார் வேலை செய்து வருகிறார் பப்லு. இவரது இரண் டரை வயது குழந்தை மர்ஜினா.
காணாமல் போன குழந்தையை 60க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து போலிசார் மீட்டனர்.
குழந்தையைக் காட்டி வேலை கேட்பதற்காக அதைக் கடத்திச் சென்ற அசாம் இளைஞரைப் போலிசார் தேடி வருகின்றனர்.