கோவை ஆர்ய வைத்தியசாலையின் நிர்வாக இயக்குநரும் அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான பி.ஆர். கிருஷ்ணகுமார், 68, கொரோனா கிருமித்தொற்றின் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, அரசியல் பிரமுகர்கள், மருத்துவர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆயுர்வேத சிகிச்சையில் சிறந்து விளங்கியதற்காக, கடந்த 2009ஆம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். அத்துடன், இவருக்கு டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதயக் கோளாறு காரணமாக 10 நாட் களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வர், நுரையீரல் பிரச்சினை கார ணமாக அவினாசியில் உள்ள மற்றொரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதியானது. இதையடுத்து, சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.
கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவருவது தொடர்பாக பிரதமர் மோடி நடத்திய உரையாடல்களில் பங்கேற்று கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர் களுக்கு சித்தா, ஆயுர்வேத சிகிச்சைகளை அளிக்கவேண்டும் எனவும் இவர் வலியுறுத்தி இருந்தார்.