புதுச்சேரி கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதலாம் என பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது.
புதுச்சேரி பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து கல்லூரி மாணவர் களும் தங்களது இறுதியாண்டுத் தேர்வை திறந்த புத்தகத் தேர்வு முறையைப் பின்பற்றி தேர்வெழுத பல்கலைக்கழகத் தேர்வு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழு அளித்துள்ள பரிந்துரையின்படி, திறந்த புத்தகத் தேர்வு முறையைப் பயன்படுத்தி இறுதியாண்டு தேர்வு எழுதும் மாணவர்கள், புத்தகம், குறிப்பேடுகள், இதர ஆய்வுப் பொருட்களைப் பார்த்துத் தேர்வெழுத அனுமதி அனுமதிக்கப்படுவதாக பல்கலைக்கழகத் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி லாசர் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக ஏப்ரல் மாதம் நடக்க இருந்த புதுவைப் பல்கலைக்கழக இறுதி யாண்டுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.
இந்நிலையில், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு தேர்வைத் தவிர்த்து இதர அனைத்து பருவத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. மேலும், அவர்களுக்கான மதிப்பெண்களும் கடந்த கால பருவத் தேர்வின் அடிப்படையில் வழங்கப்படும் எனப் புதுச்சேரி பல்கலைக்கழகத் தேர்வு ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.