தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதி

1 mins read

புதுச்­சேரி கல்­லூ­ரி­களில் இறு­தி­யாண்டு படிக்­கும் மாண­வர்கள் புத்­த­கத்­தைப் பார்த்து தேர்வு எழு­த­லாம் என பல்­க­லைக்­க­ழ­கம் அனு­மதி அளித்­துள்­ளது.

புதுச்­சேரி பல்­க­லைக் கழ­கத்­து­டன் இணைக்­கப்­பட்­டுள்ள அனைத்து கல்­லூரி மாண­வர் களும் தங்­க­ளது இறு­தி­யாண்டுத் தேர்வை திறந்த புத்­தகத் தேர்வு முறை­யைப் பின்­பற்றி தேர்­வெ­ழுத பல்­க­லைக்­க­ழகத் தேர்வு ஆணை­யம் அனு­மதி அளித்­துள்­ளது.

பல்­க­லைக்­க­ழக மானி­யக் குழு அளித்­துள்ள பரிந்­து­ரை­யின்­படி, திறந்த புத்­தகத் தேர்வு முறை­யைப் பயன்­ப­டுத்தி இறு­தி­யாண்டு தேர்வு எழு­தும் மாண­வர்­கள், புத்­த­கம், குறிப்­பே­டு­கள், இதர ஆய்­வுப் பொருட்­க­ளைப் பார்த்­துத் தேர்­வெ­ழுத அனு­மதி அனு­ம­திக்­கப்­படு­வ­தாக பல்­க­லைக்­க­ழகத் தேர்வு கட்­டுப்­பாட்டு அதி­காரி லாசர் தெரி­வித்­துள்­ளார்.

கொரோனா நோய்த்­தொற்று தடுப்பு நட­வ­டிக்கை கார­ண­மாக ஏப்­ரல் மாதம் நடக்க இருந்த புது­வைப் பல்­க­லைக்­க­ழக இறுதி யாண்­டுத் தேர்­வு­கள் ஒத்தி வைக்­கப்­பட்­டன.

இந்­நி­லை­யில், புதுச்­சேரி பல்­க­லைக்­க­ழ­கத்­தில் இறுதியாண்டு தேர்­வைத் தவிர்த்து இதர அனைத்து பரு­வத் தேர்வுகளும் ரத்து செய்­யப்­பட்­டன. மேலும், அவர்­க­ளுக்­கான மதிப்பெண்­களும் கடந்த கால பரு­வத் தேர்­வின் அடிப்­ப­டை­யில் வழங்­கப்­படும் எனப் புதுச்­சேரி பல்­க­லைக்­க­ழகத் தேர்வு ஆணை­யம் அறி­விப்பு வெளி­யிட்­டது.