சென்னை: சென்னை, சாலிகிராமம், அருணாச்சலம் சாலையில் ‘உழைப் பாளி’ என்ற பெயரில் புதிய மருத் துவமனையை சித்த மருத்துவர் வீரபாபு தொடங்கி உள்ளார்.
இங்கு சித்தா, அலோபதியுடன் கூடிய ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்கப்படும் என்றும் ரூ.10 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் வீரபாபு அறிவித்துள்ளார்.
சில தனியார் மருத்துவமனைகள் கட்டணங்களை அதிகமாக வசூலித்து வரும் நிலையில், வெறும் பத்து ரூபாய்க்கு தரமான சிகிச்சை கள் வழங்கப்படும் என வீரபாபு அறிவித்துள்ளதால், அவரது இந்த முயற்சி குறித்து சமூக வலைத் தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இவர், ஏற்கெனவே சென்னை மணப்பாக்கம், சாலிகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் உணவகங் களையும் திறந்து பத்து ரூபாய்க்கு தரமான மூலிகை உணவுகளை வழங்கி வருகிறார்.
மருத்துவர் வீரபாபு தீவிர ரஜினி ரசிகர் என்பதால் தம்முடைய உண வகங்கள், மருத்துவமனையின் பெயரில் ரஜினியின் திரைப்படத்தை குறிக்கும் வகையில் உழைப்பாளி என்றும் ரஜினியின் புகைப்படத் தையும் வைத்துள்ளார்.
சென்னை மருத்துவக் கல்லூரியின் முடநீக்கியல் துறை முன்னாள் இயக்குநர் அன்பழகன், பொது மருத்துவ டாக்டர்கள் விஜய், மணிகண்டன் ஆகியோர் அலோபதி சிகிச்சை அளிக்கின்றனர். சித்தா, அலோபதி என இரண்டு சிகிச்சைகளையும் ஒரே இடத்தில் ஏழை, எளிய மக்கள் பெறலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.