பரமக்குடி: இருமொழிக் கொள்கை தான் அதிமுகவின் கொள்கை என்பதால் மும்மொழிக் கொள் கையை ஆளுங்கட்சி எதிர்ப்பதில் வியப்பில்லை என்று கூறியுள் ளார் அதிமுக முன்னாள் எம்.பி. அ.அன்வர் ராஜா.
“தமிழ்நாட்டிற்கு தமிழ்மொழி கண் போன்றது, ஆங்கில மொழி கண்ணாடி போன்றது. கண்ணும் வேண்டும், கண்ணாடியும் வேண் டும்,” எனவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
கொரோனா கிருமிப் பரவலை முறியடிக்கும் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நாளை மறுநாள் 22ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தருகிறார் முதல்வர் பழனிசாமி. அவரை வர வேற்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் பரமக்குடியில் நடந்தது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அன்வர் ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், “தனது விடுதலைக்குப் பின் சசிகலா எடுக்கும் அரசியல் முடிவால், தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்று அரசியல் தாக்கம் இருக்கும்,” என்றார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின் படி, அடுத்தாண்டு ஜனவரி 27ஆம் தேதி சசிகலா விடுதலையாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் சசிகலா விடுத லையாக இருப்பது அதிமுக தலைமைக்கு ஏற்கெனவே தலைவலியாகி உள்ள நிலையில் அன்வர் ராஜா போன்ற ஒருசில நிர்வாகிகள் மீண்டும் சசிகலா புகழ் பாடத் தொடங்கியிருப்பது கட்சித் தலைமையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.