தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அன்வர் ராஜா: கண் போன்றது தமிழ்; கண்ணாடி போன்றது ஆங்கிலம்

1 mins read
9eaa29af-5c24-4fd7-84eb-adf1784c277c
அ.அன்வர் ராஜா. படம்: ஊடகம் -

பர­மக்­குடி: இரு­மொ­ழிக் கொள்கை தான் அதி­மு­க­வின் கொள்கை என்­ப­தால் மும்­மொ­ழிக் கொள் கையை ஆளுங்­கட்சி எதிர்ப்­ப­தில் வியப்­பில்லை என்று கூறி­யுள்­ ளார் அதி­முக முன்­னாள் எம்.பி. அ.அன்­வர் ­ராஜா.

"தமிழ்­நாட்­டிற்கு தமிழ்­மொழி கண் போன்­றது, ஆங்­கில மொழி கண்­ணாடி போன்­றது. கண்­ணும் வேண்­டும், கண்­ணா­டி­யும் வேண் டும்," எனவும்­ அவர் சுட்­டிக்­காட்டி உள்­ளார்.

கொரோனா கிரு­மிப் பர­வலை முறி­ய­டிக்கும் பணி­கள் குறித்து ஆய்வு செய்­வ­தற்­காக நாளை மறு­நாள் 22ஆம் தேதி ராம­நா­த­பு­ரம் மாவட்­டத்­திற்கு வருகை தரு­கி­றார் முதல்­வர் பழ­னி­சாமி. அவரை வர வேற்­பது குறித்த ஆலோ­ச­னைக் கூட்­டம் பர­மக்­கு­டி­யில் நடந்­தது.

இக்­கூட்­டத்­தில் கலந்­து­கொண்ட அன்­வர் ராஜா செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறு­கை­யில், "தனது விடு­த­லைக்­குப் பின் சசி­கலா எடுக்­கும் அர­சி­யல் முடி­வால், தமி­ழக அர­சி­ய­லில் மிகப்­பெ­ரிய மாற்று அர­சி­யல் தாக்­கம் இருக்­கும்," என்­றார்.

தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­டத்தின் கீழ் பெறப்­பட்ட தக­வ­லின் படி, அடுத்­தாண்டு ஜன­வரி 27ஆம் தேதி சசி­கலா விடு­த­லை­யாக வாய்ப்­புள்­ள­தா­கக் கூறப்­படு­கிறது.

சட்­ட­மன்­றத் தேர்­தல் நெருங்கி வரும் சூழ­லில் சசி­கலா விடுத லையாக இருப்­பது அதி­முக தலை­மைக்கு ஏற்­கெ­னவே தலைவலி­யாகி உள்ள நிலை­யில் அன்­வர் ராஜா போன்ற ஒருசில நிர்­வா­கி­கள் மீண்­டும் சசிகலா புகழ் பாடத் தொடங்கி­யி­ருப்­பது கட்­சித் தலை­மையை அதிர்ச்சி அடைய வைத்­துள்­ளது.