திருச்சி: திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள வாளாடியில் நடுகல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. ‘யானை குத்தி பட்டான் நடுகல்’ (படம்) என சொல்லப்படும் இக்கல்லின் நடுவில் திரிசூலமும் இடதுபுறம் மனித உருவமும் வலதுபுறம் யானையின் உருவமும் வடிக்கப்பட்டுள்ளது. சற்று சிதிலமடைந்து காணப்படும் இந்த நடுகல் கி.பி. 12ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கலாம் என்று திருச்சி ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ஆரோக்கிய தனராஜ் கூறியுள்ளார்.
‘யானை குத்தி பட்டான் நடுகல்’ என்பது ஊருக்குள் நுழையும் யானையை வீரன் ஒருவன் கொன்றாலோ அல்லது வீரனை யானை கொன்றாலோ அந்தச் சம்பவத்தின் நினைவாக வைக்கப்படும் கல்லாகும். தற்போது வாளாடியில் கண்டெடுக்கப்பட்ட கல்லும் இதையே நினைவுபடுத்துவதால் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் இதுகுறித்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என கோரியுள்ளார் ஆரோக்கிய தனராஜ்.