வாளாடியில் ‘யானை குத்தி பட்டான் நடுகல்’ கண்டெடுப்பு

திருச்சி: திருச்சி மாவட்­டம், லால்­குடி அருகே உள்ள வாளாடியில் நடு­கல் ஒன்று கண்­டெ­டுக்­கப்பட்­டுள்­ளது. ‘யானை குத்தி பட்­டான் நடு­கல்’ (படம்) என சொல்­லப்­படும் இக்­கல்­லின் நடு­வில் திரி­சூ­ல­மும் இட­து­பு­றம் மனித உரு­வ­மும் வல­து­பு­றம் யானை­யின் உரு­வ­மும் வடிக்­கப்­பட்­டுள்­ளது. சற்று சிதிலமடைந்து காணப்­படும் இந்த நடு­கல் கி.பி. 12ஆம் நூற்­றாண்­டைச் சார்ந்­த­தாக இருக்­க­லாம் என்று திருச்சி ஜோசப் கல்­லூ­ரி­யைச் சேர்ந்த பேரா­சி­ரி­யர் ஆரோக்­கிய தன­ராஜ் கூறி­யுள்­ளார்.

‘யானை குத்தி பட்­டான் நடு­கல்’ என்­பது ஊருக்­குள் நுழை­யும் யானையை வீரன் ஒரு­வன் கொன்­றாலோ அல்­லது வீரனை யானை கொன்­றாலோ அந்­தச் சம்பவத்­தின் நினை­வாக வைக்­கப்­படும் கல்­லா­கும். தற்­போது வாளா­டி­யில் கண்­டெ­டுக்­கப்­பட்ட கல்­லும் இதையே நினை­வு­ப­டுத்­து­வ­தால் தொல்­லி­யல் துறை ஆய்­வா­ளர்­கள் இது­கு­றித்து ஆய்­வு­களை மேற்­கொள்ள வேண்­டும் என கோரி­யுள்­ளார் ஆரோக்­கிய தன­ராஜ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!