கொரோனா கிருமித்தொற்றால் தமிழகத்தில் பாதிக்கப்படும் முதியோரின் எண்ணிக்கை 75 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்
குறிப்பில், “தமிழகத்தில் திங்கட்
கிழமை 78,614 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் 5,589 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 1,283 பேரும் கோவையில் 587 பேரும் சேலத்தில் 256 பேரும் குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் 30 பேரும் பெரம்பலூரில் 26 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 86 ஆயிரத்து 397 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 12 வயதுக்கு உட்பட்ட 23,534 குழந்தைகளும் 60 வயதுக்கு மேற்பட்ட 75 ஆயிரத்து 598 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். அரசு மருத்துவமனையில் 41 பேரும் தனியார் மருத்துவமனையில் 29 பேரும் என 70 பேர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை உயிரிழந்தனர்,” என்று கூறப்பட்டு உள்ளது.
சென்னையில் மீண்டும் கிருமித்தொற்று அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தொடர்ந்து ஐந்தாவது நாளாக எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.