தமிழகத்தில் தொற்றால் 75,000 முதியோர் அவதி

1 mins read
e3c8cddc-17ab-44d8-af18-317c3e27819e
படம்: ஏஎஃப்பி -

கொரோனா கிரு­மித்­தொற்­றால் தமி­ழ­கத்­தில் பாதிக்­கப்­படும் முதி­யோ­ரின் எண்­ணிக்கை 75 ஆயி­ரத்­தைக் கடந்­து­விட்­டது. இது தொடர்­பாக மாநில சுகா­தா­ரத் துறை வெளி­யிட்­டுள்ள செய்­திக்­

கு­றிப்­பில், "தமி­ழ­கத்­தில் திங்­கட்

­கி­ழமை 78,614 பேருக்கு கொரோனா பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்­டது. இவர்­களில் 5,589 பேருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

அதி­க­பட்­ச­மாக சென்­னை­யில் 1,283 பேரும் கோவை­யில் 587 பேரும் சேலத்­தில் 256 பேரும் குறைந்­த­பட்­ச­மாக ராம­நா­த­பு­ரத்­தில் 30 பேரும் பெரம்­ப­லூ­ரில் 26 பேரும் பாதிக்­கப்­பட்டு உள்­ள­னர்.

தமி­ழ­கத்­தில் இது­வரை 5 லட்­சத்து 86 ஆயி­ரத்து 397 பேருக்கு தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. அவர்­களில் 12 வய­துக்கு உட்­பட்ட 23,534 குழந்­தை­களும் 60 வய­துக்கு மேற்­பட்ட 75 ஆயி­ரத்து 598 முதி­ய­வர்­களும் இடம்­பெற்­றுள்­ள­னர். அரசு மருத்­து­வ­ம­னை­யில் 41 பேரும் தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் 29 பேரும் என 70 பேர் கொரோ­னாவால் சிகிச்சை பல­னின்றி திங்­கட்­கி­ழமை உயி­ரி­ழந்­த­னர்," என்று கூறப்­பட்டு உள்­ளது.

சென்­னை­யில் மீண்­டும் கிரு­மித்­தொற்று அதி­க­ரிக்­கத் தொடங்கி உள்­ளது. தொடர்ந்து ஐந்­தா­வது நாளாக எண்­ணிக்கை அதி­க­ரித்த வண்­ணம் உள்­ளது.