ஓபிஎஸ் முதல்வருடன் சமாதானமா? அதிரடிக்கு ஆயத்தமா?

ஓபிஎஸ் முதல்வருடன் சமாதானமா? அதிரடிக்கு ஆயத்தமா?

2 mins read
fea6944c-ca71-4426-8832-b331e053a605
முதல்­வர் பழ­னி­சா­மி (வலது), துணை முதல்­வர் ஓ பன்­னீர்­செல்­வம். படம்: ஊடகம் -

சென்னை: தமி­ழக சட்­ட­மன்­றத் தேர்­தல் நெருங்கி வரும் நிலை­யில் அதி­மு­க­வில் அவ்­வப்­போது ஏற்­பட்டு வரும் சல­ச­லப்பு அர­சி­யல் வட்­டா­ரத்­தில் பர­ப­ரப்­பைக் கூட்­டி­யுள்­ளது.

கடந்த சில நாட்­க­ளா­கவே முதல்­வர் பழ­னி­சா­மிக்­கும் துணை முதல்­வர் ஓ பன்­னீர்­செல்­வத்­துக்­கும் இடையே மன­வ­ருத்­தம் இருந்து வந்­த­தா­க­வும் முதல்­வர் வேட்­பா­ளர் யார் என்­ப­தில் இரு­வ­ருக்­கும் இடையே கருத்து வேறு­பாடு உள்ள தாக­வும் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், முதல்­வ­ரை­யும் துணை முதல்­வ­ரை­யும் எனது இரு கண்­க­ளாக நினைத்து மக்­கள் பணி­யாற்றி வரு­கி­றேன் என்று முன்­னாள் அமைச்­சர் மணி­கண்­டன் எம்­எல்ஏ கூறி­யுள்­ளார்.

"கட்­சி­யில் எவ்­வித கருத்து வேறு­பா­டும் கிடை­யாது. சட்­ட­மன்­றத் தேர்­த­லில் அதி­க­மான இடங்­களில் வெற்­றி­பெற்று மீண்­டும் அம்­மா­வின் ஆட்­சி­யைத் தமி­ழ­கத்­தில் ஏற்­ப­டுத்தவேண்­டும் என்­ப­து­தான் எங்­க­ளது இலக்கு," என்­றார் மணி­கண்­டன்.

இந்நிலையில், அக்டோபர் 7ஆம் தேதி அன்று முதல்வர் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்பட உள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, திடீரென ஓ பன்னீர்செல்வம் தனது பதவியை விட்டு விலக இருப்பதாகவும் ஜெய லலிதா சமாதியில் தர்மயுத்தம் செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி அவர் அரசு வாக னத்தை உபயோகிக்கப்போவ தில்லை என்றும் கூறப்பட்டது.

அத்துடன், நேற்று நடைபெற இருந்த அரசு நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்ள மாட்டார் என்றும் அவரது பெயர் நிகழ்ச்சி நிரலில் இல்லை என்றும் தகவல்கள் வெளி வந்தன.

இந்நிலையில் தனது ஆதர வாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓ பன்னீர்செல்வம், திடீ ரென அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடிவு செய்து அதில் பங்கேற்பதற்காக புறப்பட்டுவிட்டார் என்றும் கூறப்பட்டது.

இந்த திடீர் முடிவை அடுத்து முதல்வருடன் ஓபிஎஸ் சமாதானம் ஆகிவிட்டாரா அல்லது அடுத்த அதிரடிக்குத் தயாராகி வருகிறாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்று அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.