செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு கிராமத்தில் உள்ள தங்களது பள்ளியின் முன்னேற்றத்துக்காக முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உதவிபுரிந்து வருகின்ற னர்.
இம்மாணவர்கள் அனைவரும் தங்களால் இயன்ற அளவில் பணத்தைப் போட்டு தாங்கள் பயின்ற பள்ளிக்காக ரூ.20 லட்சம் மதிப்பிலான சிறிய ரக பேருந்து ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளனர்.
சூணாம்பேடு கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில் 1980 முதல் 2005 வரை படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இந்நிகழ்வில் முன்னாள் மாணவ-மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பேசி சிரித்து மகிழ்ந்தனர்.
இப்பள்ளியில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் 1,700 பேர் படித்து வந்த நிலையில், தற்போது வெறும் 250 பேர் மட்டுமே படித்து வருகின்றனர்.
போதிய அளவில் போக்குவரத்து வசதி இல்லாதது, குறைவான ஆசிரியர்களே பாடம் நடத்துவது உள்ளிட்ட காரணங்களால் மாணவர்கள் சேர்க்கை குறைந்து விட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் சூனாம்பேடு முன்னாள் மாணவர் பேரவையினர் வாட்ஸப் குரூப் ஒன்றை உருவாக்கி, தங்களது பள்ளிக்காக என்ன செய்யலாம் என்று ஆலோசித்து அதற்கான பணிகளைத் தொடங்கி னர். போக்குவரத்து வசதி மிக அத்தியாவசியத் தேவை என்பதால் முதற்கட்டமாக முன்னாள் மாண வர்கள் தங்களது செலவில் புதிய பேருந்தை வாங்கித் தந்துள்ளனர்.