பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது: தெற்கு ரயில்வே அறிவிப்பால் அதிர்ச்சி

பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது: தெற்கு ரயில்வே அறிவிப்பால் அதிர்ச்சி

1 mins read
4bc99f7b-84ac-44b9-aaf1-8ffa39115b88
தமிழக அரசுடன் நடத்திய ஆலோசனையின் அடிப்படையில் அத்தியாவசியப் பணியாளர்களுக்கான சிறப்பு ரயிலாக இந்த புறநகர் ரயில் சேவை நாளை முதல் செயல்பட உள்ளது. படம்: ஊடகம் -

சென்­னை­யில் நாளை 5ஆம் தேதி முதல் புற­ந­கர் ரயில் சேவை இயக்­கப்­பட உள்­ள­தாக தெற்கு ரயில்வே அறி­வித்­துள்­ளது.

சென்னை நக­ரில் நாள்­தோ­றும் லட்­சக்­க­ணக்­கான பய­ணி­கள் பய ணம் செய்­யும் இந்த புற­ந­கர் ரயில் சேைவயை உட­ன­டி­யா­கத் தொடங்­கா­மல் காலம் தாழ்த்தி வந்­த­தால் அதி­ருப்­தி­யு­டன் இருந்து வந்த பொது­மக்­கள், இப்­போது தெற்கு ரயில்­வே­யின் அறி­விப்­பால் சற்றே நிம்மதி அடைந்­துள்­ள­னர்.

எனி­னும், நாளை முதல் இந்த புற­ந­கர் ரயில் சேவையை அனைத்து தரப்­பி­ன­ரும் பயன்­ப­டுத்த முடி­யாது என்ற அறி­விப்­பை­யும் ரயில்வே நிர்­வா­கம் ெவளி­யிட்­டுள்­ளதால் பொது­மக்­கள் அதிர்ச்சி அடைந்­துள்­ள­னர்.

தெற்கு ரயில்வே வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், "ஊர­டங்கு தளர்வின் கார­ண­மாக அக்­டோ­பர் 5 முதல் சென்­னை­யில் புற­ந­கர் ரயில் சேவை துவங்­கும். ஆனால், முதற்­கட்­ட­மாக அத்­தி­யா­வ­சி­யப் பணி­யில் ஈடு­படும் ஊழி­யர்­க­ளுக்­கான சிறப்பு ரயி­லாக மட்­டுமே இது இயக்­கப்­படும்.

"மருத்­து­வம், மின்­சா­ரம், பால் விநி­யோ­கம் உள்­ளிட்ட அத்­தியா வசி­யப் பணி­களை மேற்­கொள் பவர்­கள் மட்­டுமே ரயி­லில் பய­ணம் செய்ய அனு­ம­திக்­கப்­ப­டு­வர்.

"அத்­து­டன், தமி­ழக அர­சின் கீழ் பணி­யாற்­றக்­கூ­டிய ஊழி­யர்­களும் இந்த ரயிலில் பய­ணிக்­க­லாம். அவர்­கள் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அடை­யாள அட்­டையை பரி­சோ­த­கர்­க­ளி­டம் காண்­பிக்­க­வேண்­டும்.

"ரயில் பய­ணி­கள் முகக்கவ­சம், சமூக இடை­வெ­ளி­யைக் கடைப்­பிடிக்க வேண்­டும். பய­ணி­க­ளின் உடல் வெப்­ப­மும் சோதிக்­கப்­படும்.

"அத்­தி­யா­வ­சி­யப் பணி­யா­ளர்­க­ளுக்கு மட்­டுமே டிக்­கெட் விநி­யோ­கிக்­கப்­படும். பொது­மக்­க­ளுக்கு டிக்­கெட் கிடை­யாது, அனு­ம­தி­யும் கிடை­யாது," என்று கூறியுள்­ளது.

குறிப்புச் சொற்கள்