சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் இன்னும் ஒரு கட்டுக்குள் வராமல் உள்ளது. இந்த மோசமான காலகட்டத்திலும் மாநில அரசின் வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருவதாக முதல்வர் கே.பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று தொடர்பான செலவுகளுக்கு இடையேயும் தமிழகத்தின் வரி வருவாய் உயர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் முதல்வா் மேலும் கூறினார். வருவாய் அதிகரிப்பு குறித்து முதல்வர் தனது டுவிட்டர் பக்கப் பதிவில், "கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் மாநிலத்தின் சொந்த வருவாயை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சாதகமான வளர்ச்சி காணப்பட்டுள்ளது.
"ஆளும் அதிமுக அரசின் தொடர் முயற்சிகள் காரணமாகவே இந்தளவுக்கு வருவாய் அதிகரிப்பு சாத்தியமாகி உள்ளது. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை மேலும் மேம்படச் செய்ய அதிமுக அரசு தொடர்ந்து பணியாற்றும்," என்று உறுதியளித்துள்ளார்.
தமிழகத்தின் சொந்த வரி வரு வாய் கடந்த மாதங்களைக் காட்டிலும் இப்போதும் மேம்பட்டு வருகிறது. அத்துடன், மத்திய அரசின் வரி வருவாயில் இருந்து கிடைக்கக் கூடிய பங்கும் உயா்ந்துள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் வரி வருவாய் ரூ.14,041 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.2,285 கோடி கூடுதலாகும்.
மாநிலத்தின் சொந்த வரி வருவாய் அளவைப் பாா்க்கும்போது அதுவும் உயா்ந்தே உள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் ரூ.7,765.15 கோடியாக இருந்த மாநிலத்தின் சொந்த வரி வருவாய் கடந்த ஜூலையில் ரூ.8,387.23 கோடியாக அதிகரித்திருந்தது.
பொருள், சேவை வரி விதிப்பில் மாநிலத்தின் வரி வருவாய் கடந்த ஜூலையில் மட்டும் ரூ.2,997.84 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜூலையில் ரூ.2,360.40 கோடியாக இருந்தது. அதேசமயம், முத்திரைத் தாள், பதிவுத் துறை கட்டணங்கள் வழி தமிழக அரசுக்குக் கிடைக்க வேண்டிய வருவாய் 31.8% அளவுக்குக் குறைந்துள்ளது.
இருப்பினும், பிற வருவாய் வரவுகள் அதிகரித்திருப்பது சாதக மான அம்சமாகவே பாா்க்கப்படு வதாகவும் அரசு தெரிவித்துள்ளது.இதற்கிடையே, அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் மகாராஷ் டிரம் முதலிடத்திலும் தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளதாகவும் 2020-21ஆம் ஆண்டின் முதல் பாதியில் ரூ.48,000 கோடியை தமிழகம் இதுவரை கடனாகப் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் கூறியுள்ளன.

