'சென்னையில் 33% மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு'

'சென்னையில் 33% மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு'

1 mins read
eb2f0ec4-4dbf-43fc-9f9a-4a3e29f448d0
படம்: ஏஎஃப்பி -

நாடெங்­கும் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­படுவோர் எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கிறது. இத்­தொற்று சமூ­கப் பர­வ­லாக மாறி­விட்­டதா என்­ப­தைக் கண்­ட­றிய பல்­வேறு மாநி­லங் களில் உள்ள 69 மாவட்­டங்­களில் இந்­திய மருத்­துவ ஆராய்ச்சி மன்­றம் (ஐசி­எம்­ஆர்) ஆய்வு நடத்­தி­யது.

தமி­ழ­கத்­தில் சென்னை, கோவை, திரு­வண்­ணா­மலை ஆகிய மாவட்­டங்­களில் ஆய்வு நடத்­தப்­பட்­டது.

சென்­னை­யில் உள்ள 15 மண்­ட­லங்­களில் 12,405 ரத்த மாதி­ரி­களை சோதனை செய்­த­தில் 2,673 பேருக்கு (21.5%) நோய் எதிர்ப்பு சக்தி உரு­வா­கி­யி­ருப்­பது தெரி­ய­வந்­தது. இதை­ய­டுத்து, தமி­ழ­கத்­தில் சில வாரங்­க­ளுக்கு முன்பு மீண்­டும் 2ஆம் கட்ட ஆய்வை நடத்­தி­ய­தில், சென்­னை­யில் 33.4%, கோவை­யில் 7.2%, திரு­வண்­ணா­ம­லை­யில் 8.5% பேருக்கு கொரோனா கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான நோய் எதிர்ப்பு சக்தி உரு­வாகி இருப்­பது தெரி­ய­வந்­துள்­ள­தாக இந்­திய மருத்­துவ ஆராய்ச்சி மன்­றம் தெரி­வித்­துள்­ளது.