கொரோனா கிருமித்தொற்றால் தொடமுடியாத அதிசய கிராமம்

கொரோனா கிருமித்தொற்றால் தொடமுடியாத அதிசய கிராமம்

2 mins read
562b5ee3-602c-4a2d-9289-4bb6cdc2d2a5
படம்: ஊடகம் -

உல­கம் முழு­வ­தும் உள்ள மக்­கள் கொவிட்-19 கிரு­மித்­தொற்றைத் துடைத்­தொ­ழிக்­கப் போராடி வரும் நிலை­யில், தமி­ழ­கத்­தில் உள்ள ஒரு மலைக்கிராம மக்­கள் மட்­டும் இத்­தொற்­றால் தொட்­டுக்கூட பார்க்­க­மு­டி­யாத அள­வுக்கு மிக­வும் பாது­காப்­பாக உள்­ள­னர்.

தமி­ழ­கத்­தில் கடந்த ஆறு மாதங்­க­ளுக்­கும் மேலாக லட்­சக் கணக்­கான மக்­கள் கிருமி பாதிப் பால் பெரும் அவ­திப்­பட்டு வரு­கின்றனர். ஆனால், கொரோனா என்­றால் என்­ன­வென்றே தெரி­யா­மல் ஒரு கிராம மக்­கள் இருப்­பது மக்­கள் பல­ரை­யும் ஆச்­ச­ரி­யத்­தில் ஆழ்த்தியுள்­ளது.

இந்­தக் கிரா­மத்­தில் உள்ள எளி­மை­யான வாழ்க்­கை­மு­றை­யும் சுத்­த­மான சூழ­லும்­தான் இதற்­குக் கார­ணம் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

நாகர்­கோ­வி­லில் இ­ருந்து ஏறத்­தாழ 30 கி.மீ. தொலை­வில் உள்­ளது கீரிப்­பாறை கிரா­மம்.

மேற்­குத்­தொ­டர்ச்சி மலைப் பகு­தியை அடுத்­துள்ள அந்­தக் கிரா­மத்­தில் 103 குடும்­பங்­கள் உள்­ளன. மொத்­தம் 550 பேர் வசிக்கின்­ற­னர். ரப்­பர் தோட்­டங்­க­ளைப் பரா­ம­ரிப்­ப­து­தான் இவர்­க­ளின் முக்­கிய தொழில்.

கன்­னி­யா­கு­மரி மாவட்­டத்­தில் ஆரம்­பத்­தில் இருந்தே கொரோனா பாதிப்பு இருந்­தும் இக்­கி­ரா­மத்தை மட்­டும் நோய் அண்­ட­வில்லை.

அவ­சி­யம் ஏற்­பட்­டால் ஒழிய இக்­கி­ரா­மத்தை விட்டு இம்­மக்­கள் வெளியே வரு­வ­தில்லை.

சுற்­றுச்­சூ­ழல் ஆரோக்­கி­ய­மான தாக இருப்­ப­தால் இக்­கி­ரா­மத்­தில் பெரும்­பா­லா­னோ­ருக்கு இது­வரை காய்ச்­சல் போன்ற சாதா­ரண உடல்­நலக் குறை­வு­கள் கூட வந்ததில்லை என்­றும் கூறப்­ப­டு­கிறது.

காற்­றும் தண்­ணீ­ரும் சுத்­த­மாக இருப்­ப­தால் மக்­களும் ஆரோக்­கிய மாக உள்­ள­னர்.

விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்த கிரா­மத்­திற்கு வரும் அதி­கா­ரி­கள் மூல­மா­கவே கொரோனா பற்றி கீரிப்­பாறை மக்­க­ளுக்­குத் தெரியவந்­துள்­ளது.

"நாங்­கள் நெரி­ச­லற்ற இடத்­தில் வசிக்­கி­றோம். தூய்­மை­யான காற்று, சுத்­த­மான நீர், அமை­தி­யான சூழ­லு­டன் ஆரோக்­கி­ய­மான வாழ்க்­கையை வாழ்­கி­றோம்.

"மூலி­கை­கள் நிறைந்­துள்ள இடங்­கள் வழி­யாக தண்­ணீர் பாய்ந்து வருவதால் இந்த நீரிலேயே அதிக மருத்­துவக் குணங்­கள் உள்­ளன," என்­கின்­ற­னர் இந்த கிராம மக்­கள்.