தமிழகத்தின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் 2021- ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்படுவார் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் அறிவித்தார். வேட்பாளர் ஆகப்போவது திரு பழனிசாமியா அல்லது திரு பன்னீர்செல்வமா என கடந்த சில நாட்களாக நீடித்த கேள்விக்கு முற்றுப்புள்ளியாக இந்த அறிவிப்பு அமைந்திருக்கிறது.
இன்று காலை நடைபெற்ற அக்கட்சியின் செயற்குழு அறிவிப்புக்கு அடுத்து வழிகாட்டுதல் குழுவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 11 பேர் இடம்பெறும் வழிகாட்டுதல் குழுவையும் திரு பழனிசாமி அறிவித்தார். இக்கூட்டத்திற்கு முன்னர் திரு பழனிசாமியும் திரு பன்னீர்செல்வமும் தத்தம் ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர்.