குழந்தைகள் விளையாட காவல் நிலையத்தில் அறை

குழந்தைகள் விளையாட காவல் நிலையத்தில் அறை

1 mins read

காவல் நிலை­யத்­தில் குழந்­தை­கள் விளை­யா­டு­வ­தற்­கென தனி அறை ஒதுக்­கப்­பட்­டி­ருப்­பது தென்­காசி மக்­களை ஆச்­ச­ரி­யப்­ப­ட­வும் பாராட்­ட­வும் வைத்­துள்­ளது.

இத்­த­கைய நட­வ­டிக்­கை­யின் மூலம் காவல் நிலை­யங்­கள் மீதான குழந்­தை­க­ளின் அச்ச உணர்வு குறை­யும் என்­கி­றார் தென்­காசி காவல் கண்­கா­ணிப்­பா­ளர் சுகுணா.

தென்­காசி அனைத்து மக­ளிர் காவல் நிலை­யத்­தில்­தான் குழந்­தை­க­ளுக்­கான அறை ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இதற்கு ­மக்­கள் மத்­தி­யில் நல்ல வர­வேற்­பு கிடைத்­துள்­ளது.

"இப்­போ­தெல்­லாம் காவல் நிலை­யத்­துக்கு நேரில் வந்து பெண்­களும் தைரி­ய­மா­கப் புகார் அளிக்­கின்­ற­னர். அச்­ச­ம­யம் அவர்­க­ளு­டன் வரும் குழந்­தை­கள் காவல் நிலை­யத்­தைக் கண்டு மிரண்டு போகி­றார்­கள்.

"என­வே­தான் குழந்­தை­கள் இயல்­பாக இருப்­பதை உறுதி செய்­ய காவல் நிலைய வளா­கத்­துக்­குள்­ளேயே விளை­யாட்டு அறையை உரு­வாக்கி, விளை­யாட்டுப் பொருள்களை வைத்­துள்­ளோம்," என்கிறார்கள் தென்­காசி போலிசார்.