திருவனந்தபுரம்: கேரளாவில் ஐக்கிய அரபு சிற்றரசில் உள்ள தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி நடந்துள்ள தங்கக் கடத்தல் தொடர்பில் முக்கிய குற்றவாளி உட்பட இருவர் சிக்கியுள்ளனர்.
ஐக்கிய அரபு சிற்றரசு போலிசார் அவர்களைக் கைது செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. தூதரகத்தின் பெயரில் பல கோடி மதிப்புள்ள தங்கம் கேரளாவுக்குள் கடத்தி வரப்பட்டது அண்மையில் அம்பலமானது. இது தொடர்பாக தூதரகத்தின் முன்னாள் ஊழியரான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், கேரள மாநில அரசின் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கும் கடத்தலில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடத்தல் வழக்கின் மற்றொரு முக்கிய குற்றவாளியான கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் ஃபைசல் பரீத், ராபின்ஸ் ஹமீத் ஆகியோர் தற்போது பிடிபட்டுள்ளனர்.