கோபிசெட்டி பாளையத்தில் அடையாளம் தெரியாத ஆடவரால் 51 வயது பெண் அடித்து கொல்லப்பட்டார்.
ஐந்து மகள்களின் தாயான அந்தப் பெண்ணிடம் அவரது இளைய மகளைத் திருமணம் செய்து தருமாறு டிரக் ஓட்டுநர் ஒருவர் வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த இந்த கொலையை அந்த டிரக் ஓட்டுநர் செய்திருக்கலாம் என போலிசார் சந்தேகிக்கின்றனர்.
கொல்லப்பட்ட பெண் பெரிய முடிச்சூர் கிராமத்தைச் சேர்ந்த டி. மேரி என போலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை மேரியின் இரண்டாவது மகள் அன்னாமேரியும் அவரது கணவர் புஷ்பராஜும் மேரியின் வீட்டுக்கு வந்திருந்தனர்.
இரவு 9.30 மணியளவில் தம்பதி வீட்டை விட்டுக் கிளம்ப எத்தனித்தபோது அவர்களை வழியனுப்ப மேரி வெளியில் வந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஆடவர் மேரியைத் தாக்கினார்.
மேரியின் தலையிலும் கழுத்திலும் பலத்த அடி விழுந்தது.
அந்த ஆடவரைப் பிடிக்க முயன்ற புஷ்பராஜையும் அண்டைவீட்டாரையும் அந்த ஆடவர் தாக்கிவிட்டு தப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தின் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. கொலையாளியை அடையாளம் காணும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.