வீட்டு வாசலில் பெண் அடித்துக் கொலை

கோபிசெட்டி பாளையத்தில் அடையாளம் தெரியாத ஆடவரால் 51 வயது பெண் அடித்து கொல்லப்பட்டார்.

ஐந்து மகள்களின் தாயான அந்தப் பெண்ணிடம் அவரது இளைய மகளைத் திருமணம் செய்து தருமாறு டிரக் ஓட்டுநர் ஒருவர் வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த இந்த கொலையை அந்த டிரக் ஓட்டுநர் செய்திருக்கலாம் என போலிசார் சந்தேகிக்கின்றனர்.

கொல்லப்பட்ட பெண் பெரிய முடிச்சூர் கிராமத்தைச் சேர்ந்த டி. மேரி என போலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை மேரியின் இரண்டாவது மகள் அன்னாமேரியும் அவரது கணவர் புஷ்பராஜும் மேரியின் வீட்டுக்கு வந்திருந்தனர்.

இரவு 9.30 மணியளவில் தம்பதி வீட்டை விட்டுக் கிளம்ப எத்தனித்தபோது அவர்களை வழியனுப்ப மேரி வெளியில் வந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஆடவர் மேரியைத் தாக்கினார்.

மேரியின் தலையிலும் கழுத்திலும் பலத்த அடி விழுந்தது.

அந்த ஆடவரைப் பிடிக்க முயன்ற புஷ்பராஜையும் அண்டைவீட்டாரையும் அந்த ஆடவர் தாக்கிவிட்டு தப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தின் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. கொலையாளியை அடையாளம் காணும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!