பதவிக்காக விஜய் சேதுபதி ரசிகர் மன்றத் தலைவர் கொலை

பதவிக்காக விஜய் சேதுபதி ரசிகர் மன்றத் தலைவர் கொலை

2 mins read
cf1424d4-021f-449b-834f-cd5eb4088a96
படம்: ஊடகம் -
multi-img1 of 2

நடி­கர் விஜய் சேது­பதி யின் ரசி­கர் மன்­றத் தலை­வரை அந்­தப் பதவி மீதுள்ள ஆசை­யின் கார­ண­மா­கவே கொலை செய்த தாக கொலை­யைச் செய்­த­வர் போலி­சா­ரி­டம் வாக்­கு­மூ­லம் அளித்­துள்­ளார்.

புதுச்­சே­ரி­யில் விஜய் சேது­பதி ரசி­கர் மன்ற நிர்­வா­கி­கள் இடையே ஏற்­பட்ட மோத­லில் ரசி­கர் மன்­றத் தலை­வர் கடந்த 4ஆம் தேதி கொல்­லப்­பட்­டார்.

இந்தச் ­சம்­ப­வம் தொடர்­பில் ஒரு சிறு­வன் உட்­பட ஆறு பேரைப் போலி­சார் கைது செய்­துள்­ள­னர்.

புதுச்­சே­ரியை அடுத்த ரெட்­டி­யார்­பா­ளை­யம் பகு­தி­யைச் சேர்ந்­த­வர் மணி­கண்­டன்.

விஜய் சேது­ப­தி­யின் ரசி­கர் மன்­றத் தலை­வ­ராக இருந்த இவருக்­ கும் மன்ற நிர்­வா­கி­யாக இருந்த ஆட்­டுப்­பட்­டி­யைச் சேர்ந்த ராஜ­சேகருக்­கும் இடையே அவ்­வப்போது மோதல் இருந்து வந்­துள்­ளது. ராஜ­சே­க­ருக்­கும் தலை­வர் பதவி மீது ஒரு கண் இருந்­துள்­ளது.

இந்­நி­லை­யில், நெல்­லித்­தோப்பு வழி­யாக தனது மாமி­யார் வீட்­டுக்கு பைக்­கில் சென்று கொண்­டி­ருந்த மணி­கண்­டனை ராஜ­சே­க­ரும் அவ­ரது நண்­பர்­களும் வழி­ம­றித்து ஆயு­தங்­க­ளால் தாக்­கிக் கொன்­ற­னர்.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பாக மணி­கண்­ட­னின் மனைவி அளித்த புகா­ரைத் தொடர்ந்து, தலை­ம­றை­வான ராஜ­சே­க­ரை­யும் அவ­ரது நண்­பர்­க­ளை­யும் போலி­சார் தேடி­வந்­த­னர்.

இந்­நி­லை­யில், விஜய் சேது­ப­தி­யின் ரசி­கர் மன்­றச் செய­லா­ளர்­கள் மூவ­ரைப் பிடித்து அவர்­க­ளி­டம் போலி­சார் விசா­ரணை நடத்­தி­ய­போது, ரசி­கர் மன்­றத் தலை­வர் பதவி யாருக்கு என்­பது தொடர்­பாக மணி­கண்­ட­னுக்­கும் ராஜ­சே­க­ருக்­கும் இடையே கடும் வாக்­கு­வா­தம் முற்ற, முடிவில் ராஜ­சே­க­ரும் அவ­ரது நண்­பர்­கள் சுனில், சந்­தோஷ், மாறன், ஜான்­சன் ஆகிய நால்வரும் இணைந்து மணி­கண்­டனை வெட்டிக்­கொன்­றதை ஒப்புக்­கொண்­ட­னர்.

சாயம் பூசும் வேலை­ பார்த்து வந்த 36 வயது மணி கண்­ட­னுக்கு விஜ­ய­கு­மாரி என்ற மனை­வி­யும் 4 வய­தில் ஒரு மக­னும் ஒரு வய­தில் ஒரு மக­னும் உள்­ள­னர்.

மன்­றத்­தின் தலை­வர் பத­விக்­காக ஆசைப்­பட்டு அதில் ஏற்­பட்ட ஆத்­தி­ரத்­தால் கூட்­டா­ளி­க­ளு­டன் சேர்ந்து மணி­கண்­டனை கொன்ற தாக ராஜ­சே­கர் வாக்­கு­மூ­லம் அளித்­துள்­ளது மக்­க­ளி­டம் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்தி உள்­ளது.