சிறையில் இருந்த உறவினரைப் பார்க்க கஞ்சாவுடன் சென்ற இளம்பெண் கைது

சிறையில் இருந்த உறவினரைப் பார்க்க கஞ்சாவுடன் சென்ற இளம்பெண் கைது

1 mins read
c607aa76-04d1-481a-b908-053e8f0dc68b
படம்: ஊடகம் -

தனது உற­வினரான சிறைக்­கைதி ஒரு­வ­ரைப் பார்க்கச் சென்ற வளர்­மதி (படம்) என்ற இளம்­பெண், பிஸ்­கெட்டை துளையிட்டு அதில் கஞ்­சாவை நிரப்பி வந்­தது சிறைக்­கா­வ­லர்­க­ளின் சோத­னை­யின்­போது தெரிய வந்­துள்­ளது. இதை­ய­டுத்து அந்­தப் பெண்­ணைக் கைது செய்து, அவ­ரி­டம் போலி­சார் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

பூவி­ருந்­த­வல்­லியை அடுத்த கரை­யான்­சா­வ­டி­யில் உள்ள கிளைச் சிறை­யில் சென்னை உள்­ளிட்ட பல்­வேறு பகு­தி­க­ளி­லும் நடை­பெறும் முக்­கிய குற்­றச்­ சம்­ப­வங்­களில் கைது செய்­யப்­பட்­ட­வர்­கள் அடைக்­கப்­பட்டு உள்­ள­னர்.

இந்­நி­லை­யில், எண்­ணூ­ரில் நடந்த கொலை வழக்கு சம்­பந்­த­மாக கார்த்­திக் என்­ப­வ­ரும் இந்­தச் சிறையில் அடைக்­கப்­பட்­டுள்­ளார். நேற்று முன்­தி­னம் மாலை இவ­ரைப் பார்ப்­ப­தற்­காக அங்கு வந்த அவ­ரது உற­வுக்­கா­ரப் பெண் வளர்­மதி, 21, பிஸ்­கட், பழம் ஆகி­ய­வற்­றைக் கொடுக்க வந்­த­தாக போலி­சா­ரி­டம் கூறி­யுள்­ளார். ஆனால், அதன்­பின்னர், போலிசாரை ஏமாற்­றி­விட்டு மெல்ல கஞ்­சாவை சிறைக்­குள் கொண்டு வந்­ததை சிறைக்­கா­வ­லர்­கள் கண்­டு­பி­டித்­து­விட்­ட­னர்.

வளர்­மதி கொண்டு வந்­தி­ருந்த பொருட்­க­ளைச் சோதனை செய்த போது, பிஸ்­கெட்டை துளை­யிட்டு அதில் கஞ்­சாவை மறைத்து வைத்து அவர் கொண்டு வந்­தி­ருந்­தது கண்டு­பி­டிக்­கப்­பட்­டது.

இதை­ய­டுத்து அப்­பெண்ணை பூவி­ருந்­த­வல்லி போலி­சா­ரி­டம் சிறைக்­கா­வ­லர்­கள் ஒப்­ப­டைத்­த­னர்.

போலி­சா­ரின் விசா­ர­ணை­யில் பிஸ்­கெட்­டுக்­குள் 50 கிராம் கஞ்­சாவை மறைத்து எடுத்து வந்­ததை வளர்­மதி ஒப்­புக்­கொண்­டார்.