கம்பம்: தமிழகத்திற்கு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு நேற்றுடன் 125 ஆண்டுகள் நிறைவுபெற்று உள்ளது.
1895ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதியன்று (10-10-1895) தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசனத்திற்கான வாழ்வாதாரமாக விளங்குகின்ற முல்லைப் பெரியாறு அணையிலிருந்து இந்த மாவட்டங்களுக்குத் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
நேற்று 125வது ஆண்டுகள் நிறைவுபெற்றதை பொதுமக்களும் விவசாயிகளும் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
18ஆம் நூற்றாண்டின் இறுதியில் தென்தமிழகத்தை வளப்படுத்தி வந்த ஆறுகள் பொய்த்துவிட்டன.
இதனால் வேளாண்மையை மேம்படுத்த 1798ல் இராமநாதபுரம் சேதுபதி மன்னர், அமைச்சர் முத்து இருளப்பரில் துவங்கி 1808இல் ஜேம்ஸ் கால்டுவெல், 1862இல் மேஜர் ரைவீஸ், மேஜர் பேயின், 1870இல் ஸ்மித் என பலர் ஆய்வு களும் திட்டங்களும் தயார் செய்த னர். ஆனால் இறுதியில் கர்னல் ஜான் பென்னிகுக் தலைமையில் முல்லையாறுக்கும் பெரியாறுக்கும் நடுவே 152 அடி உயர அணையைக் கட்ட பிரிட்டிஷ் அரசு முடிவு செய்தது. அணை நீரானது எல்லாக் காலங்களிலும் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் 999 ஆண்டுகளுக்கான ஒப் பந்தத்தை அக் 29, 1886இல் பிரிட்டிஷ் அரசு செய்துகொண்டது.
இதையடுத்து ரூ.43 லட்சம் திட்ட மதிப்பீட்டில் கர்னல் பென்னிகுக் தலைமையில் பிரிட்டிஷ் ராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணையைக் கட்டும் பணியில் இறங்கியது. பென்னிகுக்கின் தீவிர முயற்சியால் 1895இல் முல்லைப் பெரியாறு அணை கட்டி முடிக்கப்பட்டது. அதே ஆண்டு (இந்திய நேரப்படி) அக்டோபர் 10, 1895 மாலை 6 மணிக்கு சென்னை மாகாண ஆளுநர் வென்லாக் தேக்கடிக்கு வந்து, பெரியாறு அணைக்கட்டு தண்ணீரை தமிழகப் பகுதிக்கு திறந்துவைத்தார்.
அன்றிலிருந்து இன்று வரை 125 ஆண்டுகளாக தலைமுறைகள் கடந்தும் தண்ணீர் கொடுத்து தமிழகத்தின் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவ சாயத்திற்கும் குடிநீருக்கும் முக்கிய ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை இருந்து வருகிறது.