நாமக்கல்: ராசிபுரத்தில் இரு பெண் குழந்தைகளின் வறுமை நிலையைத் தங்களுக்கு சாதக மாக்கிக்கொண்டு, மிட்டாய் கொடுத்து அவர்களை கடந்த ஆறு மாத காலமாக ஏழு பேர் பாலியல் வன்ெகாடுமை செய்து வந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஒரு முதியவர் உட்பட ஏழு பேர் போக்சோ சட்டத்தின்கீழ் கைதாகி உள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் தனது தாயுடன் வசித்து வரும் 12 மற்றும் 13 வயதான இரு சிறுமி களும் பாலியல் கொடுமைக்கு ஆளாகி வரும் தகவல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதபிரியா கவனத்துக்குச் சென்றுள்ளது.
இதையடுத்து, கடந்த ஆறு மாதமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த செந்தமிழ்செல்வம், 31, மணிகண்டன், 30, முத்துசாமி, 75, சிவா, 26, சூர்யா,23, சண்முகம், 45, வரதராஜன், 30, ஆகிய ஏழு பேரும் கைதாகினர்.
இன்னும் சிலரையும் போலிசார் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருவரும் நாமக்கல் குழந்தைகள் நலக் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே திண்டுக்கல்லில் 12 வயதான சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைதானவர் நிரபராதி என்று விடு விக்கப்பட்டதை அடுத்து காவல் துறை மீதும் அரசு மீதும் விமர் சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், இரு சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ள இச்சம்பவத்தில் 75 வயது முதியவர் கைதாகியிருப்பது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
கணவர் இல்லாத சிறுமிகளின் தாயார், ஏழ்மை காரணமாக அரு கிலுள்ள தனியார் ஜவ்வரிசி ஆலை யில் கூலி வேலைக்குச் சென்று வருகிறார். இரவு நேரத்திலும் வேலைக்குச் சென்றுவிடுவார். இத னால், தனியாக வீட்டில் இருந்துள்ள அக்கா, தங்கைக்கு தின்பண்டங்கள் வாங்கிக்கொடுத்து இந்தக் குற்றச் செயல் நடந்துள்ளது.

