தீபாவளியை முன்னிட்டு 2,000 சிறப்புப் பேருந்துகள்

தீபாவளியை முன்னிட்டு 2,000 சிறப்புப் பேருந்துகள்

2 mins read
f3fe49b3-f2ec-40ca-a94f-e6b714c97743
படம்: ஊடகம் -

தீபா­வளி பண்­டிகை அடுத்த மாதம் 14ஆம் தேதி கொண்­டா­டப்­படும் நிலை­யில், சென்­னை­யில் இருந்து சொந்த ஊர்­க­ளுக்­குச் செல்ல விரும்­பு­ப­வர்­க­ளுக்­காக சுமார் 2,000 சிறப்­புப் பேருந்­து­கள் இயக்­கப்­ப­ட­லாம் என கூறப்­ப­டு­கிறது.

பொது­வாக தீபா­வ­ளிப் பண்­டி­கைக்­காக சென்­னை­யில் இருந்து சொந்த ஊர்­க­ளுக்கு சென்று பண்­டி­கையைக் கொண்­டாட விரும்­பு­ப­வர்­கள் பேருந்து மற்றும் ரயில்களில் முன்­ப­திவு செய்­வார்­கள். தற்­போது கொரோனா பர­வல் கார­ண­மாக பேருந்து, ரயில் போக்­கு­வ­ரத்து முழு­வீச்­சில் இல்லை.

ஒரு­சில இடங்­க­ளுக்கு மட்­டும் சிறப்பு ரயில்களில் இயக்­கப்­ப­டு­கின்­றன. அரசு பேருந்­து­கள் 50 விழுக்­காடு வரை இயக்­கப்­ப­டு­கின்­றன.

கொரோனா பாதிப்­பின் கார­ண­மாக சிறப்பு பேருந்­து­கள் பற்­றிய அறி­விப்பு தாம­த­மாகி வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

கடந்த ஆண்டு சுமார் 4,000 சிறப்பு பேருந்­து­கள் தீபா­வளி சம­யத்­தில் இயக்­கப்­பட்­டன. சுமார் 6 லட்­சம் பேர் பய­ணம் செய்­த­தா­கக் கூறப்­பட்­டது.

இது குறித்து, "கொரோனா பாதிப்பு குறித்த பயம் மக்­கள் மத்­தி­யில் நிலவி வரு­கிறது. தற்­போது 50% பேருந்­து­கள் இயக்­கப்­பட்டு வரு­கின்­றன. அதன் அடிப்­ப­டை­யில் தீபா­வளி பண்­டி­கைக்கு கடந்த ஆண்டை விட 50% குறை­வாக சிறப்பு பேருந்துகளை இயக்­க­லாமா என்­பது குறித்து பரி­சீ­லித்து வரு­கி­றோம்," என்று போக்­கு­வ­ரத்து கழக அதி­காரி ஒரு­வர் குறிப்­பிட்­டார்.

"இது பற்றி அனைத்து போக்­கு­வ­ரத்து கழக அதி­கா­ரி­க­ளின் ஆலோ­சனைக் கூட்­டம் விரை­வில் நடை­பெற உள்­ளது. போக்­கு­வ­ரத்து துறை அமைச்­ச­ரு­டன் ஆலோ­சித்த பின் இறுதி முடிவு அறிவிக்கப்படும்," என்­றார் அவர்.

ரயில்­கள் மற்­றும் தனி­யார் பேருந்­து­கள் அதி­க­ளவு இயக்­கப்­ப­டா­த­தால் அரசு சிறப்பு பேருந்து

­க­ளுக்கு தேவை அதி­க­ரிக்க வாய்ப்பு உள்­ளது.