வேலூர்: மாசுக் கட்டுப்பாட்டு வாரிய இணை தலைமைப் பொறியாளர் ஒருவரின் வீட்டிலும் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறை போலிசார் நடத்திய அதிரடி சோதனையில் கட்டுக்கட்டாக கோடிக் கணக்கில் பணமும் கிலோ கணக்கில் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த 24 மணி நேரமாக நடந்த ெதாடர் சோதனையில் ரூ.3.60 கோடி ரொக்கம், நான்கு கிலோ தங்க நகைகள், 11 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.100 கோடி மதிப்பிலான 40க்கும் மேற்பட்ட சொத்துப் பத்திரங்கள், கார் ஆகிய வற்றை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலிசார் கைப்பற்றினர்.
வேலூர், காந்தி நகரில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் பன்னீர்செல்வம், 51, பணிபுரிந்து வந்தார்.
இவரது கட்டுப்பாட்டில்தான் திருவண்ணாமலை, தர்மபுரி, ஓசூர், விழுப்புரம், வாணியம்பாடி ஆகிய ஆறு மாவட்டங்களும் உள்ளன.
இதனால், அந்தப் பகுதிகளில் அமையும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் இவரது கையில்தான் இருந்து வந்துள்ளது. இதைப் பயன்படுத்தி பன்னீர்செல்வம் லஞ்சம் வாங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பன்னீர்செல்வம் முறைகேட்டில் ஈடுபடுவதாக லஞ்ச ஒழிப்புப் போலிசாருக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, காந்தி நகரில் அமைந்துள்ள இவரது வாடகை வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலிசார் சோதனை நடத்தினர்.
அப்போது, இந்த வீடு, காரில் இருந்து ரூ.34 லட்சம் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் சிக்கியது.
இைதத்ெதாடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்டம், ராணிபெல் நகரில் உள்ள பன்னீா்செல்வத்தின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புப் போலிசார் சோதனை நடத்தினர்.
அப்போது, ரூ. 3.60 கோடி ரொக்கம், 4 கிலோ தங்கம், 11 கிலோ வெள்ளிப் பொருட்கள், 40க்கும் மேற்பட்ட சொத்துப் பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்ன.
கணக்கில் வராத பணம், தங்கம், வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து பன்னீா்செல்வம் மீது விசாரணை நடத்தப்பட உள்ளதாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலிசார் தெரிவித்தனா்.
இதனால், இத்துறையில் பணி யாற்றும் இதர அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனா்.
வேலூரில் உள்ள வீட்டில் சோதனை குறித்த தகவல் கிடைத்ததும், பன்னீர்செல்வத்தின் குடும்பத்தினர் வீட்டில் இருந்த பணம், நகைகளை மூட்டைகளில் கட்டி பழைய பொருட்களை வைக்கும் அறையில் மறைத்துள்ளனர்.
ஆனால், போலிசார் மறைத்து வைத்த மூட்டைகளை மொத்தமாக பறிமுதல் செய்ததைப் பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ந்தனர்.