அண்மையில் காங்கிரஸ் ஒரு மூளை வளர்ச்சி இல்லாத, சிந்திக்கும் திறனற்ற கட்சி என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்த நடிகை குஷ்பு, இப் ேபாது தனது விமர்சனத்திற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார்.
காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த குஷ்பு அண்மையில் பாஜகவில் இணைந்தார். இதைத்தொடர்ந்து பேட்டி அளித்தவர் காங்கிரஸ் கட்சியை சாடும் வகையில் பேசியிருந்தார்.
குஷ்புவின் கருத்துகள் மனவளர்ச்சி குன்றியோரை அவமானப்படுத்தும் விதத்தில் உள்ளதாகக் கூறி மாற்றுத்திறனாளி கள் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து, குஷ்பு மீது மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் போலிசில் புகார் அளித்தனர். அத்துடன், குஷ்பு மீது தமிழகத்தின் பல காவல் நிலையங்களிலும் புகார் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தான் வேண்டுமென்றே அப்படி பேசவில்லை என்று விளக்கம் அளித்துள்ள குஷ்பு, தான் பேசிய வார்த்தைக்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.
“காங்கிரசை மனநலம் பாதிக்கப்பட்ட கட்சி,” என்று விமர்சித்தமைக்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தனது திரைப்பட வாய்ப்புகள் வீழ்ந்தவுடன், ஆட்சியிலிருந்த திமுகவில் இணைந்தவர், அதன்பின்னர் காங்கிரஸ் கட்சிக்கு மாறி, காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்து வந்தவர், திடீரென அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.
காங்கிரசில் இருந்த காலத்தில், பாரதிய ஜனதாவை கடுமையாக விமர்சித்து வந்தவர், தற்போது திடீரென காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதாவில் ஐக்கியமாகியுள்ளார்.
அவசரப் புத்தியிலும் ஆழ்ந்த மனக் கவலையிலும் வேதனையான ஒரு தருணத்திலும் சில வார்த்தைகளை நான் தவறாகப் பயன்படுத்தியதற்காக மிகவும் வருந்துகிறேன், மன்னிப்பு கேட்கிறேன்.
பாஜகவில் இணைந்துள்ள நடிகை குஷ்பு.