போலி விவசாயிகளை உருவாக்கி 'மெகா' மோசடி: 101 பேர் கைது

போலி விவசாயிகளை உருவாக்கி 'மெகா' மோசடி: 101 பேர் கைது

1 mins read
66f3b401-ae0a-4a18-a5d4-6693831e9643
படம்: இபிஏ -

சென்னை: பிரதமரின் கிசான் நிதியுதவித் திட்டம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், விவசாயிகள் வங்கிக் கணக்கில் ஆண்டு ஒன்றுக்கு ரூ.6,000 மூன்று தவணைகளாக வரவு வைக்கப்படும்.

இதில் விவ­சா­யி­கள் அல்­லா­த­வர்­கள் முறை­கேட்­டில் ஈடு­பட்டு பய­ன­டைந்­த­தாக புகார்­கள் எழுந்­தன.ஆரம்­பத்­தில் விழுப்­பு­ரம், கட­லூர் மாவட்­டங்­களில் அதி­க­ள­வில் முறை­கேடு நடந்­தது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. பின்­னர் விசா­ரணை தீவி­ர­ம­டைந்த நிலை­யில் பல்­வேறு மாவட்­டங்­களில் முறை­கே­டு­கள் நடை­பெற்­றது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

குறிப்­பாக, கட­லூர், விழுப்­பு­ரம், கள்­ளக்­கு­றிச்சி மற்­றும் டெல்டா மாவட்­டங்­களில் இந்த மோசடி நடந்­தி­ருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது. சுமார் 6 லட்­சம் போலி விவ­சா­யி­கள் பிர­த­மர் கிசான் திட்­டத்­தில் சேர்க்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கத் தெரிய வந்­தது. இத்­திட்­டத்­தில் ரூ.110 கோடி அள­விற்கு முறை­கேடு நடந்­தி­ருப்­ப­தாக தமி­ழக வேளாண்­துறை செய­லர் ககன்­தீப் சிங் பேடி தெரி­வித்­தார்.

இடைத்­த­ர­கர்­கள், அதி­கா­ரி­கள் என பலர் இந்த மெகா மோச­டி­யின் பின்­ன­ணி­யில் இருந்­தது தெரி­ய­வந்­தது. மோச­டி­யில் ஈடு­பட்­ட­வர்­களை சிபி­சி­ஐடி போலி­சார் கைது செய்து வரு­கின்­ற­னர்.

இது­வரை நூற்­றுக்­கும் மேற்­பட்ட அதி­கா­ரி­கள் வேலை­யி­லி­ருந்து தற்­கா­லி­க நீக்­கம் செய்­யப்­பட்­ட­தாக தக­வல் வெளி­வந்த நிலை­யில் தற்­போது 101 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன. முறை­கே­டாக பணம் பெற்­ற­வர்­க­ளி­ட­மி­ருந்து பணத்தை வசூல் செய்­யும் பணி­யும் நடை­பெற்று வரு­கிறது. இது­வரை 105 கோடி ரூபாய் வரை மீட்­கப்­பட்டுள்­ள­தாக அதி­கா­ரி­கள் கூறியுள்­ள­னர்.