மநீம முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன்

மநீம முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன்

2 mins read
6e624a32-fc50-41b0-9894-e3edf8e0b236
தனியார் நட்சத்தில் ஹோட்டலில் நடைபெற்றமக்கள் நீதி மய்ய கட்சிக்கூட்டத்தில் பங்கேற்றோ ரில் ஒரு பகுதியினர். படம்: தமிழக ஊடகம் -

சென்னை: அடுத்த ஆண்டு நடை­பெற உள்ள தமி­ழக சட்­ட­மன்­றத் தேர்­த­லில் மக்­கள் நீதி மய்­யம் (மநீம) போட்­டி­யி­டும் என்­றும் முதல்­வர் வேட்­பா­ளர் கமல்­ஹா­சன் என்­றும் அக்­கட்சி அறி­வித்து உள்­ளது.

சட்­ட­மன்­றத் தேர்­தலை எதிர்­கொள்­வது குறித்து மக்­கள் நீதி மய்­யம் கட்­சி­யின் ஆலோ­ச­னைக் கூட்­டம் அக்­கட்­சி­யின் தலை­வர் கமல்­ஹா­சன் தலை­மை­யில் நேற்று நடை­பெற்­றது.

சென்னை பாண்டி பஜா­ரில் உள்ள ஒரு தனி­யார் நட்­சத்­திர விடு­தி­யில் அக்­கட்­சி­யின் மாநில நிர்­வாக மற்­றும் செயற்­குழு கூட்­டம் காலை 11 மணிக்கு துவங்­கி­யது.

இந்த ஆலோ­ச­னைக் கூட்­டத்­தில் 30க்கும் மேற்­பட்ட கட்சி நிர்­வா­கி­கள் பங்­கேற்­ற­னர். சட்­ட­மன்ற தேர்­த­லில் கட்­சி­யின் நிலைப்­பாடு, தேர்­தல் நிதி திரட்ட வழி­வ­கை­கள், கட்­சி­யின் வளர்ச்சி போன்ற பல்­வேறு அம்­சங்­கள் விவா­திக்­கப்­பட்­டன.

தேர்­தல் கூட்­டணி உள்­பட அனைத்து முடி­வு­க­ளை­யும் எடுக்க கமல்­ஹா­ச­னுக்கே அதி­கா­ரம் உள்­ளது என தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது.

கூட்­டத்­திற்­குப் பிறகு அக்­கட்சி சார்­பில் வெளி­யி­டப்­பட்ட அறிக்­கை­யில், "2021 சட்­ட­மன்­றத் தேர்­த­லின்­போது தனித்­துப் போட்­டி­யி­டு­வது அல்­லது ஒத்­த­க­ருத்­துள்ள கட்­சி­க­ளு­டன் கூட்­டணி அமைத்து தேர்­தலை சந்­திப்­பது, வேட்­பா­ளர்­களை இறுதி செய்­வது, தேர்­தல் வெற்­றிக்­கான வியூ­கம் அமைப்­பது, கன்­னி­யா­கு­மரி மக்­க­ளவை இடைத்­தேர்­த­லில் போட்­டி­யி­டு­வது குறித்த முக்­கிய முடி­வு­களை எடுக்­கும் பொறுப்பை கமல்­ஹா­ச­னுக்கு அளிக்­கப்­ப­டு­வ­தாகவும் தீர்­மா­னங்­கள் நிறை­வேற்­றப்­பட்­டன," என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும், சட்­ட­மன்­றத் தேர்­த­லில் மக்­கள் நீதி மய்­யத்­தின் முதல்­வர் வேட்­பா­ள­ராக கமல்­ஹா­சன் தேர்வு செய்­யப்­பட்­டுள்­ள­தாக அக்­கட்­சி­யின் துணைத் தலை­வர் மகேந்­தி­ரன் அறி­வித்­தார்.

மக்­கள் நீதி மய்­யம் கட்சி கடந்த ஆண்டு நடை­பெற்ற நாடா­ளு­மன்­றத் தேர்­த­லி­லும் 22 சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளி­லும் தனித்­துப் போட்­டி­யிட்­டது. அதில் 1 லட்­சத்­திற்­கும் அதி­க­மான வாக்­கு­களை அக்­கட்சி பெற்­றி­ருந்­தது. குறிப்­பாக கோவை, தென்­சென்னை, வட­சென்னை மற்­றும் தமி­ழ­கத்­தின் பல்­வேறு பகு­தி­க­ளி­லும் பர­வ­லான வாக்­கு­களை அக்­கட்சி பெற்­றது.