4 மாவட்டங்களில் மதுவை விஞ்சும் கஞ்சா; குண்டர்கள் கொட்டம்

4 மாவட்டங்களில் மதுவை விஞ்சும் கஞ்சா; குண்டர்கள் கொட்டம்

2 mins read
97a98ebd-8fc3-4f8b-9b73-7e9a49c3ab21
சென்னையில் கடந்த மூன்று மாதங்களில் 1,680 கிலோவுக்கும் அதிக கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. 368 பேர் கைதாயினர். 201 வழக்குகள் பதியப்பட்டன. சென்னை மாதவரத்தில் அதிகாரிகள் கஞ்சாவைப் பார்வையிட்டனர். படம்: தமிழக ஊடகம் -

சென்னை: தமிழகத்தில் கொரோனா கிருமி கார­ண­மாக மது­பா­னக் கடை­கள் பல மாத காலம் மூடப்­பட்­ட­தால் புதிய சமூ­கப் பிரச்­சினை தலை­தூக்கி இருப்­ப­தாக கவலை கிளம்பி இருக்­கிறது. சென்னை உள்­ளிட்ட நான்கு மாவட்­டங்­களில் இளை­யர்­கள் முதல் பல­ரும் மது­பா­னத்­துக்குப் பதி­லாக கஞ்சா பக்­கம் திரும்பி இருக்­கிறார்­கள் என்று மக்­களும் சமூக ஆர்­வ­லர்­களும் தெரி­விக்­கி­றார்­கள்.

கொவிட்-19 கட்­டுப்­பாடு காலத்­தில் மது­பா­னம் கிடைக்­கா­த­தால் பல­ரும் கஞ்­சா­வைப் பயன்­ப­டுத்த தொடங்­கி­ய­தா­க­வும் டாஸ்­மாக் கடை­கள் திறக்­கப்­பட்ட பிற­கும் அவர்­கள் தொடர்ந்து கஞ்­சா­வையே நாடி வரு­வ­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

கஞ்சா வியா­பா­ரி­கள் ரவு­டி­களின் துணை­யு­டன் போலிஸ் அதி­கா­ரி­க­ளின் ஒத்­து­ழைப்­போடு செயல்­ப­டு­வ­தால் கஞ்சா புழக்­கத்­தைத் தடுக்க முடி­ய­வில்லை என்று அவர்­கள் கூறு­கி­றார்­கள்.

சென்னை, திரு­வள்­ளூர், காஞ்சி­பு­ரம், செங்­கல்­பட்டு ஆகிய மாவட்­டங்­களில் காய்­கறி வாக­னங்­கள் உள்­ளிட்ட அவ­சி­யப் பொருட்­களை ஏற்­றிச் செல்­லப்­படும் வாக­னங்­களில் மறைத்து கஞ்சா கொண்டு செல்­லப்­ப­டு­கிறது என்­றும் இவற்றை போலிஸ் அதி­கா­ரி­கள் சில நேரங்­களில் கண்­டும் காணா­மல் விட்டு­வி­டு­கி­றார்­கள் என்­றும் தெரி­கிறது. குறிப்­பாக ஆந்­தி­ரா­வில் இருந்து பல வழி­க­ளி­லும் கஞ்சா சென்னைக்குக் கடத்தி வரப்­ப­டு­வதாகத் தக­வல்­கள் கூறு­கின்­றன.

கஞ்சா புழக்­கம் அதி­க­ரித்­து­விட்­ட­தன் கார­ண­மாக மது­பான விற்­பனை குறைந்­த­தால் டாஸ்­மாக் நிர்­வா­கம் இது பற்றி அர­சாங்­கத்­திற்கு ரக­சி­ய­மாக எச்­ச­ரிக்கை விடுத்­த­தா­க­வும் இதை­ய­டுத்து அதி­கா­ரி­கள் கஞ்­சா­வுக்கு எதி­ரான போரை தொடங்கி இருப்­ப­தா­க­வும் அவை குறிப்­பி­டு­கின்­றன.

இருந்­தா­லும் இதில் அதி­கா­ரிகள் முழு­மூச்­சா­கச் செயல்­ப­ட­வில்லை என்­றும் தரம் குறைந்த கஞ்­சாவை விற்­பனை செய்­யும் நபர்­களை மட்டும் அதி­கா­ரி­கள் பெய­ர­ள­விற்குக் கைது­செய்­வ­தா­க­வும் சிலர் கூறு­கின்­ற­னர்.

ஆகை­யால் மாநி­லத்­தில் கஞ்சா புழக்­கத்­தைக் கட்­டுப்­ப­டுத்த வேண்­டும் என்­றால் கஞ்சா வியா­பா­ரி­கள் மற்­றும் ரவு­டி­க­ளு­டன் தொடர்­பு­டைய போலி­சாரை கண்­கா­ணித்து அவர்­களை முத­லில் களை­யெ­டுக்க வேண்­டும் என்று சமூக ஆர்­வ­லர்­கள் குரல்­கொ­டுக்­கி­றார்­கள்.

இல்­லை­யெ­னில் அந்த நான்கு மாவட்­டங்­கள் மட்­டு­மின்றி மாநிலத்­துக்கே பேரா­பத்து ஏற்­பட்­டு­வி­டும் என்­றும் அவர்­கள் எச்சரிக்கை குரல்­ கொ­டுத்­துள்­ள­னர்.