கொரோனா உயிரிழப்புகள்: சிறையில் சசிகலா வேதனை

கொரோனா உயிரிழப்புகள்: சிறையில் சசிகலா வேதனை

1 mins read
2779ec0e-6e9b-4ad0-aef5-b5b7496a7f93
படம்: ஊடகம் -

தமி­ழ­கத்­தில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பெரும் உயி­ரி­ழப்­பு­கள் ஏற்­பட்டு வரு­வது தமக்கு மிகுந்த கவலை அளிப்­ப­தாக சசி­கலா தெரி­வித்­துள்­ளார்.

சொத்­துக்­கு­விப்பு வழக்­கில் தண்­டனை பெற்று பெங்­க­ளூரு சிறை­யில் அடைக்­கப்­பட்­டுள்ள அவர், தமது வழக்­க­றி­ஞர் ராஜா­செந்­தூர் பாண்­டி­ய­னுக்­குத் தன் கைப்­பட கடி­தம் எழு­தி­யுள்­ளார்.

அதில், நன்­ன­டத்தை, தண்­ட­னைக் குறைப்பு விஷ­யத்­தில் விரை­வில் சட்­டப்­படி முடி­வெ­டுக்­கப்­படும் எனத் தாம் நம்­பு­வ­தா­கக் குறிப்­பிட்­டுள்­ளார்.

"கொரோனா கிரு­மித்­தொற்று பர­வல் கார­ண­மாக தமி­ழக மக்­கள் மிக­வும் பாதிப்­ப­டைந்­துள்­ள­தாக வெளி­வ­ரும் செய்­தி­கள் எனக்கு வேதனை அளித்­துள்­ளது. தமி­ழக மக்­களும் பிற மாநில மக்­களும் இந்த நோய்த்­தொற்­றி­லி­ருந்து முற்­றி­லு­மாக மீண்டு இயல்பு நிலைக்­குத் திரும்ப தின­மும் இறை­வனை மன­தார வேண்டி வரு­கி­றேன்," என்று சசி­கலா தமது கடி­தத்­தில் தெரி­வித்­துள்­ளார்.

சொத்­துக்­கு­விப்பு வழக்­கில் தமக்கு விதிக்­கப்­பட்­டுள்ள அப­ரா­தத் தொகையை நீதி­மன்­றத்­தில் முறைப்­படி செலுத்த ஏற்­பாடு செய்­ய­வேண்­டும் என்­றும் இது­தொ­டர்­பாக டிடிவி தின­க­ர­னு­டன் ஆலோ­சித்­துச் செயல்­பட வேண்­டும் என்­றும் தமது வழக்­க­றி­ஞ­ரி­டம் சசி­கலா கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

அர­சி­யல் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­த­வேண்­டும் எனும் நோக்­கத்­து­டன் சிலர் தம்­மைப் பற்­றித் தவ­றான தக­வல்­களை வெளி­யி­டு­வ­தா­க­வும் சசி­கலா தமது கடிதத்தில் மேலும் குறிப்­பிட்­டுள்­ளார்.