புதுக்கோட்டை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழத்தில் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
“தமிழகத்தில் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. அதிக காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டன. புதுக்கோட்டையில் நோய்ப்பரவல் குறைந்திருக்கிறது. சுமார் 6 ஆயிரம் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன,” என்று முதல்வர் பழனிசாமி கூறினர்.
“புதுக்கோட்டை மாவட்டத்தில் ஐடிசி நிறுவன ஆலை தொடங்கப்பட்டு 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. முதலீட்டாளர் மாநாட்டில் எந்தத் தொழிலும் தமிழகத்திற்கு வரவில்லை என ஸ்டாலின் பொய் சொல்லி வருகிறார். புதுக்கோட்டையில் 197 கோடி ரூபாய் செலவில் தொழில் தொடங்க முதலீடு செய்துள்ளன. 211 தொழில் நிறுவனங்கள் சுமார் 300 கோடி செலவில் தொழில் தொடங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
“புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் ஐடிசி தொழிற்சாலை புதுக்கோட்டையில் செயல்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி கண்டு பிடித்தவுடன் அரசு செலவில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும்,” முதல்வர் பழனிசாமி மேலும் தெரிவித்தார்.