சென்னை: விஜயதசமி் அன்று குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்க்கவும் அப்படி குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் நாளன்றே அவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்களை வழங்கவும் தமிழக தொடக்கக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
இந்தக் கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி யுள்ள சுற்றறிக்கையில், “தமிழ கத்தில் உள்ள பள்ளிகளில் விஜய தசமியின்போது பெற்றோர் தங்கள் குழந்தைகளை முதன்முதலாக பள்ளியில் சேர்த்து விடுவர். இது ஒரு வழக்கமான நடைமுறை. எனவே அரசுப் பள்ளிகளில் நாளை மறுநாள் 26ஆம் தேதி கொண்டாடப்படும் விஜயதசமியின் போது மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்தலாம்.
“ஊர் பொது இடங்களில் பதா கைகள் வைத்தும் மக்களிடம் மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பது குறித்து தெரியப்படுத்தியும் அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,” என்று கூறப்பட்டுள்ளது.