சென்னை: தியாகராய நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் இரு தினங்களுக்கு முன்பு ரூ.5 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் சூறையாடப்பட்டன.
இந்தச் சம்பவம் தொடர்பில், அங்கிருந்த கண்காணிப்பு புகைப்படக் கருவிகளில் பதிவாகி இருந்த காணொளிக் காட்சிகள் அனைத்தும் ஒரு திகில் படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வைத் தருவதாக போலிசார் கூறியுள்ளனர்.
“கொள்ளையில் தொடர்புடைய இருவரைப் பற்றி துப்பு கிடைத்துள்ளது. விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்,” என்றும் போலிசார் தெரிவித்தனர்.
சென்னை தியாகராயநகர் சாருல்லா தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரகுமார், 60. இவர் அதே பகுதியில் உள்ள மூசா தெருவில் இருக்கும் ஒரு வீட்டின் முதல் மாடியை வாடகைக்கு எடுத்து, அதில் உத்தம் ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகைகளை மொத்த வியாபாரம் செய்து வந்தார்.
இந்நிலையில், திருட்டு நடந்த இடத்திலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் பொருத்தப்பட்டுள்ள 120 கண்காணிப்பு புகைப்படக் கருவிகளை மூன்று தனிப்படை போலிசார் ஆய்வு செய்து அதை காெணா ளியாகத் தயாரித்துள்ளனர்.
45 நிமிடங்கள் ஓடும் அந்தக் காணொளி, ஒரு திகில் படம்போல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
காெணாளியின் தொடக்கத்தில் மூசா தெருவுக்கு வரும் இரு கொள்ளையர்கள் இரவு 10.30 மணியளவில் மோட்டார் சைக்கிளை நிறுத்துகிறார்கள்.
கொள்ளை அடிப்பவர் மட்டும் மோட்டார் சைக்கிளை விட்டு இறங் கிய நிலையில், மற்றொருவர் திரும்பிச் சென்று விடுகிறார்.
இறங்கிய ஆடவர், முகத்தை துணியால் மூடியபடி, இரண்டு கைகளிலும் கையுறை அணிந்து நகைக்கடை உள்ள வீட்டின் பின்பக்க மதில் சுவரில் ஏறி, உள்ளே குதிக்கிறார்.
சரியாக 11.30 மணிக்கு பூட்டை உடைத்து நகைக்கடைக்குள் சென்று ஒரு லாக்கரை உடைக்கிறார். அதற்குள் இருந்த தங்க-வைர நகைகள், தங்கம், வெள்ளிக்கட்டிகளை வாரிவாரி பைக்குள் போடுகிறார். பை நிரம்பி விட, மற்றொரு லாக்கரை உடைக்கிறார். ஆனால், அதை உடைக்க முடியவில்லை.
சுமக்க முடியாமல், நகைகள் உள்ள பையை தூக்கிக்கொண்டு, நள்ளிரவு 1.30 மணிக்கு நகைக்கடையை விட்டு வெளியேறுகிறார்.
அதிகாலை 4 மணி வரை தெரு ஓரமாக உட்கார்ந்திருக்கிறார். அதன் பிறகு அவரை இறக்கி விட்டுச்சென்ற கொள்ளை ஆசாமி மீண்டும் வந்து, மோட்டார் சைக்கிளில் கொள்ளை ஆசாமியை அழைத்துச் செல்கிறார். இப்படி நீள்கிறது காணொளிக் காட்சி.