அரசியல் சுவரொட்டி வேண்டாம்: விஜய்

அரசியல் சுவரொட்டி வேண்டாம்: விஜய்

1 mins read
f1b8e23a-dc18-4840-84da-1aec712e0f7f
திருச்சியில் காணப்பட்ட சுவரொட்டி. படம்: தமிழக ஊடகம் -

சட்­ட­மன்­றத் தேர்­தல் நெருங்கி வரு­வ­தால் ரஜி­னியை முந்­திக்­கொண்டு விஜய்யை அர­சி­ய­லில் திணிக்­கும் ஏற்­பா­டு­கள் நடை­பெற்று வரு­வ­தா­கக் கூறப்ப­டு­கிறது. அதன் ஒரு பகு­தி­யாக விஜய் நேற்று முன்­தி­னம் தமது ரசி­கர்­க­ளு­டன் திடீர் ஆலோ­ச­னை­யில் ஈடு­பட்­டார்.

சென்னை அருகே பனை­யூ­ரிலுள்ள விஜய் வீட்­டில் நடந்த இச்சந்­திப்­பில் மதுரை, திருச்சி, கன்னியாகுமரி, ராணிப்­பேட்டை ஆகிய மாவட்ட விஜய் மக்­கள் இயக்க நிர்­வா­கி­கள் கலந்துகொண்­ட­னர்.

மக்­கள் இயக்­கத்தை வலுப்ப­டுத்­து­வது தொடர்­பாக விஜய் ஆலோ­சனை நடத்­தி­ய­தாக கூறப்­ப­டு­கிறது.

மாவட்ட நற்­பணி மன்­றங்­கள் தம்மை அர­சி­ய­லில் தொடர்­புப்­ப­டுத்தி சுவ­ரொட்­டி­கள் ஒட்­டு­வதை விஜய் கண்­டித்­த­தா­க­வும் சுவ­ரொட்­டிக­ளைத் தவிர்க்­கு­ மாறு அவர் கேட்­டுக்­கொண்­ட­தா­க­வும் கூறப்படுகிறது.

மக்­க­ளுக்­கான உத­வி­களை தொடர்ந்து செய்­யுங்­கள் என அறி­வு­றுத்­திய விஜய், வழக்­கம்­போல் தேவை­யான உத­வி­கள் தம்­மி­டம் இருந்து வரும் என உறு­தி­ய­ளித்­தா­ராம்.