சென்னை: இந்திய தனித்துவ அடையாளத்திற்கான ஆணையம் (UIDAI) தற்போது புதிய தோற்றத்திலான ஆதார் அட்டைகளை அறிமுகம் செய்துள்ளது.
‘பாலிவினைல் குளோரைட்’ (பிவிசி) அட்டையான இதனை ஏடிஎம் அட்டை போல எளிதாக வைத்திருக்க முடியும்.
ஆனால் புதிய அட்டையில் தமிழ் காணாமல் போய்விட்ட தாக புகார்கள் எழுந்துள்ளன.
ஏற்கெனவே வழங்கப்பட்ட ஆதார் அட்டைகளில் எனது ஆதார் எனது அடையாளம் என்ற வாசகம் தமிழில் இடம்பெற்றிருக்கும்.
ஆனால் புதிய ‘பிவிசி’ ஆதார் அட்டையில் அந்த வாசகம் நீக்கப்பட்டு அந்த இடத்தில் இந்தி வாசகங்கள் திணிக்கப்பட்டு உள்ளதாக
புகாரில் கூறப்படுகிறது. தொழில் நுட்பக் கோளாறா அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா என மொழி ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.