சென்னை: தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக சென்று கொண்டு இருந்தார்.
அப்போது தெருவோரம் சிறுவர்கள் கேரம் விளையாடிக் கொண்டு இருந்தனர்.
அதனைக் கண்டதும் உற்சாகம் அடைந்த ஜெயக்குமார் வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு அவரும் விளையாட உட்கார்ந்துவிட்டார்.
அமைச்சரால் ஒரு காயையும் அடிக்க இயலவில்லை.
ஐந்தாவது முயற்சியில் அவர் அடித்த காய் விழுந்தது.
அதனை அங்கு இருந்தவர்கள் கைதட்டி கொண்டாடினர்.
விளையாட்டை முடித்துக்கொண்ட ஜெயக்குமார், "மனம் தளரக்கூடாது; விடாமுயற்சி இருந்தால் வெற்றி பெறலாம்," என சிறுவர்களிடம் சொல்லிவிட்டு நகர்ந்தார்.

