கொரோனா தடுப்பூசி சோதனை: 65 பேருக்கும் ஆபத்து இல்லை

இங்­கி­லாந்­தின் ஆக்ஸ்­போர்ட் பல்­க­லைக்­க­ழ­கம் தயா­ரித்­துள்ள ‘கோவி­ஷீல்ட்’ என்­னும் கொரோனா தடுப்பு மருந்து இந்­தியா முழு­வ­தும் 17 மையங்­களில் 1,600 பேரி­டம் சோதிக்­கப்­பட்டு வரு­கிறது. தமி­ழ­கத்­தில் சென்னை அரசு பொது மருத்­து­வ­மனை, போரூர் ராமச்­சந்­திரா மருத்­து­வ­மனை ஆகி­ய­வற்­றி­லும் சோதனை முயற்­சி­கள் நடக்­கின்­றன. சென்னை அரசு பொது மருத்­து­வ­ம­னை­யில் ‘கோவி­ஷீல்ட்’ தடுப்­பூசி 65 தொண்­டூ­ழி­யர்­க­ளுக்கு செலுத்­தப்­பட்­டுள்­ளது.

இது­கு­றித்து கூறிய தமி­ழக சுகா­தா­ரத் துறை அதி­கா­ரி­கள், 65 பேரில் இது­வரை யாருக்­கும் எவ்­வி­தப் பிரச்­சி­னை­யும் ஏற்­ப­ட­வில்லை என்­றும் அவர்­க­ளைத் தொடர்ந்து கண்­கா­ணித்து வரு­வ­தா­க­வும் தெரி­வித்­துள்­ள­னர்.

மேலும், 18 வய­துக்கு மேற்­பட்ட, ஆரோக்­கி­ய­மான அனை­வ­ரும் கொரோனா தடுப்­பூசி பரி­சோ­த­னைக்கு முன்­வ­ர­லாம் என்­றும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பின்­னர் எப்­போ­தும் போல வேலைக்­குச் செல்­லலாம் என்­றும் சுகா­தா­ரத் துறை தெரி­வித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!