மணமக்களுக்கு வெங்காயம் பரிசளித்த மங்கையர்

புதுக்­கோட்டை: புதுக்­கோட்டை அருகே உள்ள கிடா­ரம்­பட்­டி­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய மாநில உண­வுத்துறை அமைச்­சர் ஆர்.காம­ராஜ், "மழை­யின் காரணமாகத் தான் வெங்­கா­யம் விலை உயர்ந்து உள்­ளது. இந்த விலை உயர்வு குறித்து அரசு அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து வரு­கிறது. இந்த உயர்வு தொடர்ந்து நீடித்தால் நியாய விலைக் கடை­களில் வெங்­கா­யத்தை விநி­யோ­கம் செய்­ய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்," என்றார்.

இதற்­கி­டையே, வெங்­கா­யத்தை அதி­க­ளவு கொள்­மு­தல் செய்­வ­தற்­காக மகா­ராஷ்­டிர மாநி­லத்துக்கு கூட்­டு­ற­வுத் துறை அதி­கா­ரி­கள் சென்­றுள்­ளனா். இத­னால், அடுத்த வாரம் முதல் அதிகள­வில் வெங்­கா­யம் விற்­பனை செய்­யப்­படும் என கூறப்படுகிறது.

ஆரணியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்வில் ஷீபா சுவிதா- செந்தில்குமார் தம்பதிகளுக்கு மணமகளின் தோழிகள் வெங்காயத்தைப் பரிசாக அளித்தனர். வெங்காயம் விலை திடீரென கிலோவுக்கு ரூ.100 வரை அதிகரித்துள்ள நிலையில் 5 கிலோ வெங்காயத்தை பூச்செண்டு போல அலங்கரித்து மணப்பெண்ணின் தோழிகள் திருமணப் பரிசாக அளித்தனர். படம்: தமிழக ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!