சென்னை: சென்னையில் போக்கு வரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை ரூ.5,000 கோடி செலவில் உலகத் தரத்துடன் கூடிய ஈரடுக்கு மேம்பாலம் கட்டப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி யில் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சருமான நிதின் கட்காரியை தமிழக முதல்வர் கே. பழனிசாமி சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் நிதின் கட்காரி பேசியபோது, “சென்னையில் ரூ.5,000 கோடி செலவில் அைனத்துலகத் தரத்தில் ஈரடுக்கு மேம்பாலத்தை அமைப்பதற்கு மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.
“இந்த மேம்பாலத்தின் மூலம் சென்னையில் போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறையும்.
“சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை அமைக்கப்படும் இம்மேம்பாலக் கட்டுமானப் பணிகள் வரும் ஜனவரி மாதத் துக்கு முன்பே தொடங்கிவிடும்.
“மேம்பாலத்தை ஈரடுக்கில் வடி வமைக்க அைனத்துலக நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தப் பட உள்ளது. இந்த மேம்பாலப் பணி கள் முடிந்த பிறகு அடுத்த 20-25 ஆண்டு காலம்வரை சென்னைக்கு எந்த ஒரு பிரச்சினையும் இருக்காது,” என நம்பிக்கை தெரிவித்தார்.
இத்திட்டத்திற்காக இரும்பு, சிமெண்ட் பொருட்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்படும் எனவும் இதனால் மாநில அரசுக்கு ரூ.500 கோடி ரூபாய் மிச்சமாகும் எனவும் முதல்வரிடம் கூறிய நிதின் கட்காரி, மத்திய அரசும் தேசிய நெடுஞ்சாலைத் துறையும் இணைந்து ரூ.1,000 கோடி செலவை ஏற்க உள்ளதாகவும் சொன்னார்.
“சென்னையில் பல்முனைய சரக்குப் போக்குவரத்துப் பூங்கா அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு 2021 ஜனவரிக்குள் முடிக்கப்படும். இந்தச் சரக்கு முனையத் திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இந்த திட்டத்துக்கான ஒத்துழைப்பை நல்கிய தமிழக முதல்வருக்கு நன்றி,” என்றார் நிதின் கட்காரி.
மத்திய அமைச்சர் நிதின் கட்காரி முதல்வர் பழனிசாமி யுடன் தமிழகத்தில் நெடுஞ்சாலை கட்ட மைப்புப் பணிகளின் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தி னார். மேம்பாலத்தை ஈரடுக்கில் வடிவமைக்க அைனத் துலக நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் முதல்வரிடம் கட்காரி தெரிவித்தார்.