ராணுவ வீரனாகும் தனது ஆசை நிறைவேறாமல் போனாலும் கிராமத்து ஏழை, எளிய இளை ஞர்களின் காவலராகும் கனவை நனவாக்கி வருகிறார் ‘மிஸ்டர் தமிழ்நாடு’ பதக்கம் வென்ற பிரபாகரன்.
அகில இந்திய ஆணழகன் போட்டியில் பதக்கத்தை வென்றுள்ள பிரபாகரனால், தனது உயரம் குறைவாக இருந்த காரணத்தால் ராணுவத்தில் சேரமுடியாத நிைல ஏற்பட்டது. வயது மூப்பின் காரணமாக ரயில்வே துறையில் பணியாற்றும் வாய்ப்பும் பறிபோனது.
எனினும், இதனால் மனம் துவளாதவர், 40க்கும் மேலான இளையர்களை காவலர் பணியில் கரை சேர்த்துவிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம், செந்தமிழ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் மிஸ்டர் திருச்சி பட்டத்தையும் ‘மிஸ்டர் தமிழ்நாடு’ பட்டத்தையும் வென்றுள்ளார்.
அத்துடன், தென்னிந்திய ஆண ழகன் போட்டி, அகில இந்திய ஆணழகன் போட்டியில், வெண்கல, வெள்ளிப் பதக்கமும் பெற்றுள்ளார்.
இந்நிலையில், தன்னைப் போன்று சாதிக்க ஏங்கும் கிராமத்து ஏழை, எளிய இளைஞர்களுக்குப் பயிற்சியளித்து அவர்களைப் பணியமர்த்தி வருகிறார்.
இதற்காக முக்கொம்பு சுற்றுலா மையத்தில் காலை, மாலை இரு வேளைகளிலும் சுற்றுவட்டார கிரா மங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் உடற்பயிற்சி, கயிறு ஏறுதல், ஓட்டம், நீளம் தாண்டுதல் என பல்வேறு பயிற்சிகளையும் பிரபாகரன் அளித்துவருகிறார்.
மேலும், உடற்பயிற்சிக் கூடங்களிலும் தனிப்பட்ட ஆலோசகராக பலருக்குப் பயிற்சி அளித்து, அதில் வரும் வருவாயைக் கொண்டு இளைஞர்களுக்குப் புரதப் பொருட்கள், காலணி போன்றவற்றை வாங்கிக் கொடுத்து பயிற்சியும் ஊக்கமும் அளித்து வருகிறார்.
இளையர்கள் காவல்துறை, ராணுவ வேலை வாய்ப்புகளில் முத்திரை பதிக்க திறந்தவெளி உடற்பயிற்சி மையங்களைத் தமிழக அரசு ஏற்படுத்தவேண்டும் எனவும் பிரபாகரன் கோரியுள்ளார்.