காதல் திருமணம்; ரூ.50,000 அபராதம் விதித்த பஞ்சாயத்து தலைவர்கள் கைது

காதல் திருமணம்; ரூ.50,000 அபராதம் விதித்த பஞ்சாயத்து தலைவர்கள் கைது

1 mins read
d5489db6-0f87-4e46-8fe3-721c02e912d1
காதல் தம்பதிக்கு ரூ.50,000 அபராதம் விதித்ததால் கைதான செல்வராஜ், கமலக் கண்ணன். படம்: ஊடகம் -

காதல் திரு­ம­ணம் செய்­து­கொண்ட தம்­ப­திக்கு அப­ரா­தம் விதித்த கீழ்­பள்­ளிப்­பட்டு பஞ்­சா­யத்துத் தலை­வர்­க­ளைப் போலி­சார் கைது செய்­த­னர். சண்­மு­கம் என்­ப­வர் தலை­ம­றை­வான நிலை­யில் அவ­ரைத் தேடி வரு­கின்­ற­னர்.

பஞ்சாயத்துத் தலைவர்கள் காதல் திரு­ம­ணம் செய்துகொண்ட மண­மகன் வீட்­டா­ருக்கு 40,000 ரூபா­யும் பெண் வீட்­டா­ருக்கு 10,000 ரூபா­யும் அப­ரா­தம் விதித்தனர்.

திருப்­பத்­தூர் மாவட்­டம், கீழ் பள்­ளிப்­பட்டு பகு­தி­யைச் சேர்ந்த ஜீவா­னந்­த­மும் சின்ன கொல்ல குப்­பம் பகு­தி­யைச் சேர்ந்த பவானி யும் காத­லித்து வந்­துள்­ள­னர்.

இத­னை­ய­றிந்த பவா­னி­யின் அப்பா நாக­ராஜ், பவா­னிக்கு வேறோர் இடத்­தில் திரு­ம­ணம் நடத்தி­வைக்க ஏற்­பா­டு­க­ளைச் செய்து­வந்த நிலை­யில், ஜீவானந்­தம் பவா­னியை அவ­ச­ர ­அ­வ­சரமாக திரு­ம­ணம் செய்­து­கொண்­டார்.

இைதத்­தொ­டர்ந்து, பஞ்சா யத்துத் தலை­வர்­கள் செல்­வ­ராஜ், கம­லக்­கண்­ணன், சண்­மு­கம் ஆகி யோர் தம்­ப­தி­க­ளி­டம் விசா­ரணை நடத்தி, ரூ.50,000 அப­ரா­தம் விதித்­ததை அடுத்து, ஜீவா­னந்­தம் காவல்­நி­லை­யத்­தில் புகார் தந்­தார்.

புகா­ரில், "முன்­பெல்­லாம் காதல் திரு­ம­ணம் செய்­யும் தம்­ப­தி­யின் பெண் வீட்­டா­ருக்கு 5,000 ரூபா­யும் மாப்­பிள்ளை வீட்­டா­ருக்கு 8,000 ரூபா­யும் அபராதம் விதிக்­கப்­பட்டது. ­ஆனால், இப்­போது எங்­கள் குடும்­பத்­தி­ன­ருக்கு ரூ.50,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்டுள்­ளது. நாங்­கள் 5 பைசா வட்­டிக்கு ரூ.20,000 பணத்தை வாங்கி பஞ்­சா­யத்­தா­ரி­டம் செலுத்தினோம். மீத­முள்ள பணத்தை ஒரு வாரத்­திற்­குள் செலுத்தும்படி கட்­டா­யப்­ப­டுத்­து­கின்­ற­னர். கூலி வேலை செய்­யும் எங்­க­ளால் எப்­படி உடனே அவ்­வ­ளவு பணத்தை தர இய­லும்?" என்று கேட்டிருந்தனர். இந்நிலையில், இருவர் கைதாகி உள்ளனர்.