இந்தியாவிலேயே முதலீடுகளை அதிக அளவில் ஈா்ப்பதில் தமிழக மாநிலம் முதலிடத்தில் இருப்பதாக 'கேர்' என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் பொருளாதார விவரங்களின் அடிப்படையில், இந்த நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி வரையிலான விவரங்களை மதிப்பீடு செய்து, 'கேர்' ஆய்வு நிறுவனம் தகவல்களை வெளியிட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளைக் காட்டிலும் இவ்வாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாத காலகட்டத் தில் இந்தியாவால் ஈர்க்கப்படும் முதலீடுகள் கடும் வீழ்ச்சி அடைந்தன. எனினும், இந்தியாவிலேயே தமிழகம் அதிக அளவில் புதிய முதலீடுகளை ஈர்த்துள்ளது.
முதலீடுகளை ஈர்ப்பதில் கடந்த ஆண்டு மூன்றாவது இடத்தில் இருந்த தமிழகம், இந்த ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தையும் வீழ்த்தி முதலிடம் பிடித்துள்ளது.
தமிழகம் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் ரூ.20,000 கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்த்துள்ளது.
அதாவது இந்தியாவுக்கு வந்த மொத்த முதலீடுகளில் 16% அளவுக்கு தமிழகம் ஈா்த்துள்ளது.
இதே காலகட்டத்தில் ஆந்திர மாநிலம் 11% முதலீடுகளையும் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கர்நாடகா மாநிலங்கள் தலா ஏழு விழுக்காடு முதலீட்டையும் ஈா்த்துள்ளன.
கடந்த மாத இறுதியில் மட்டும் 17,000 முதல் 18,000 பேருக்கு புதிதாக வேலை வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் ரூ.10,062 கோடி மதிப்புள்ள ஒன்பது புதிய திட்டங்களுக்கு தமிழகத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது.
கொரோனா கால நெருக்கடியிலும் தமிழகம் புதிய முதலீடுகளில் சாதனை படைத்திருப்பதாக முதல்வர் பழனிசாமிக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிகின்றன.
.

