'விஜய்யை சுற்றி ஆபத்து சூழ்ந்துள்ளது'

'விஜய்யை சுற்றி ஆபத்து சூழ்ந்துள்ளது'

2 mins read
c126435d-09c6-4dde-b46b-cc6aea1ece9b
விஜய் தனது பெற்றோருடன். படம்: தமிழக ஊடகம் -

சென்னை: தமிழ்த் திரை­யு­ல­கின் முன்­னணி நடி­கர் விஜய்­யைச் சுற்றி ஆபத்­தான விஷ­யம் நடந்து கொண்­டி­ருப்­ப­தாக அவ­ரது தந்தை சந்­தி­ர­சே­கர் கூறி­யுள்­ள­தால் ரசி­கர்­களை ஒரு பய உணர்­வும் அதிர்ச்­சி­யும் தொற்­றி­யுள்­ளது.

"விஜய் ஒரு ஆபத்து வளை யத்­தில் தற்­போது சிக்­கி­யுள்­ளார். அதி­லி­ருந்து அவ­ரைக் காப்­பாற்­றவே நான் 'அகில இந்­திய தள­பதி விஜய் மக்­கள் இயக்­கம்' என்ற கட்­சி­யைத் தொடங்­கி­னேன்," என்று இயக்­கு­ந­ரும் விஜய்­யின் தந்­தை­யு­மான எஸ்ஏ சந்­தி­ர­சே­கர் தெரி­வித்­துள்­ளார்.

"நடி­கர் விஜய்க்கே தெரி­யாத ரக­சி­யம் ஒன்று அவ­ரைச் சுற்றி நடந்­து­கொண்­டி­ருக்­கிறது. விஜய்­யைச் சுற்றி எப்­போ­தும் சில குற்­ற­வா­ளி­கள் இருந்து கொண்­டுள்­ள­னர். அவர்­க­ளால் விஜய்­யைச் சுற்றி ஆபத்­தான விஷயங்­கள் நடந்து கொண்­டி­ருக்­கின்­றன," எனத் தெரி­வித்­துள்ள சந்­திரசேகர், எல்லா தந்தை மக­னைப் போலவே எங்­க­ளுக்கு இடை­யே­யும் அவ்­வப்­போது சண்டை வரும் என்­றும் இரு­வ­ரும் பேசா­மல் இருப்­பது சாதா­ர­ண­மான விஷ­யம்தான் என்­றும் கூறி­யுள்­ளார்.

"என் தந்தை எஸ்.ஏ.சந்­தி­ர­சே­கர் தொடங்­கி­யுள்ள கட்­சிக்­கும் எனக்­கும் நேர­டி­யா­கவோ மறை­மு­க­மா­கவோ எவ்­வித தொடர்­பும் இல்லை. ரசி­கர்­கள் யாரும் இதில் சேர­வேண்­டாம். எனது பெய­ரையோ, புகைப்­ப­டத்­தையோ பயன்­ப­டுத்­தி­னால் சட்­டப்­படி நட­வ­டிக்கை எடுப்­பேன்," என்று விஜய் வெளி­யிட்ட அறிக்கை அவ­ராக வெளி­யிட்­டது இல்லை என்­றும் சந்­தி­ர­சே­கர் கூறி­யுள்­ளார்.

இதற்­கி­டையே, தனது மகன் விஜய்யை மட்­டு­மல்ல, தன்­னை­யும் ஏமாற்றி இயக்­கு­நர் சந்­தி­ர­சே­கர் கட்­சி­யைத் தொடங்­கி­ய­தாக விஜய்­யின் அம்மா ஷோபா சந்­தி­ர­சே­கர் தெரி­வித்­துள்­ளார்.

இதை­ய­டுத்து, அந்­தக் கட்­சி­யின் பொரு­ளா­ளர் பொறுப்­பில் இருந்து தான் வில­கி­விட்­ட­தா­க­வும் ஷோபா விளக்­கம் அளித்­துள்­ளார்.

விஜய் மக்­கள் இயக்­கத்தை அர­சி­யல் கட்­சி­யாக மாற்­று­வ­தில் விஜய்க்குத் துளி­யும் விருப்­பம் இல்லை என்­றும் தனது கண­வர்­தான் பிடி­வா­த­மாக அவ்­வப்­போது விஜய் அர­சி­ய­லுக்கு வரு­வது போல வெளியில் பேசிக்­கொண்டு இருந்­த­தா­க­வும் இத­னால் அவ­ரு­டன் பேசு­ வ­தையே விஜய் நிறுத்­திக்­கொண்ட தா­க­வும் கூறி­யுள்­ளார் ஷோபா.