விமானங்களில் தமிழில் அறிவிப்பு

விமானங்களில் தமிழில் அறிவிப்பு

2 mins read

சென்னை: எதிர்­வ­ரும் பொங்­கல் பண்­டிகைக்குள் தமி­ழக விமான நிலை­யங்­களில் தரை­யி­றங்­கும் அனைத்து விமா­னங்­க­ளி­லும் முதல் அறி­விப்­பு தமிழ்மொழி­யில் ஒலிக்­கும் என தமிழ் வளர்ச்சி, தொல்­லி­யல் துறை அமைச்­சர் மாஃபா பாண்­டி­ய­ரா­ஜன் தெரி­வித்­துள்­ளார்.

"முத­லில் தமிழ்­மொ­ழி­யில் அறி­விப்பு வெளி­யான பிறகே ஆங்­கி­லம், இந்தி ஆகிய மொழி­க­ளி­லும் அறி­விப்புகள் வெளி­யா­கும்," என்­றும் அவர் மேலும் கூறி­னார்.

இந்த அறி­விப்பு தமி­ழர்­க­ளி­டம் மகிழ்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

பொதுவாக, விமா­னங்­களில் முத­லில் ஆங்­கி­லம், இந்தி, அதன்பிறகே தமிழ்­மொ­ழியில் அறி­விப்­பு­கள் வெளியாகின்­றன.

இந்­நி­லை­யில், இரண்டு நாள் பய­ண­மாக டெல்லி சென்­றி­ருந்த அமைச்­சர் பாண்­டி­ய­ரா­ஜன், மத்­திய விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் துறை அமைச்­சர் ஹர்­தீப் சிங் புரியை நேரில் சந்­தித்து உரை­யா­டி­னார்.

அப்­போது, விமா­னங்­க­ளி­லும் விமான நிலை­யங்­க­ளி­லும் தமி­ழில் அறி­விப்­பு­களை வெளி­யிடவேண்­டும் என அவர் வலி­யு­றுத்­தி­னார்.

இந்தச் சந்­திப்­புக்­குப் பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசிய பாண்டி­ய­ரா­ஜன், "தமி­ழ­கத்­தி­ல் இருந்து புறப்­படும் விமா­னங்­க­ளி­லும் மற்ற மாநி­லங்­கள், வெளி­நாடு­களில் இருந்து தமி­ழ­கம் வரும் விமா­னங்­க­ளி­லும் முதல் அறி­விப்பு தமி­ழில் இடம்­பெறவேண்­டும் என மத்­திய அமைச்­ச­ரி­டம் கூறினேன்.

"தமிழ் பேசும் மக்­களை மகிழ்விக்கும் வகை­யில், பொங்­கலுக்குள் தமிழகத்தில் தரை­யிறங்­கும் அனைத்து விமா­னங்­க­ளி­லும் தமிழ்மொழி­யில் முதல் அறி­விப்பு ஒலிப்பது உறுதி," என்றார்.

இது­கு­றித்து, தனது டுவிட்­டர் பக்­கத்­தில் தமி­ழில் பதி­விட்­டுள்ள ஹர்­தீப் சிங், "அைமச்சர் பாண்டி­ய­ரா­ஜன் விமான அறி­விப்­பு­களை தமி­ழில் அறி­விக்­கும்­படி கேட்­டுக்­கொண்­டார். விமா­ன அமைச்­ச­கம் ஏற்­கெ­னவே, அனைத்து விமான நிறுவனங்­க­ளிடமும் விமான அறி விப்­பு­களை முடிந்­த­வரை தமி­ழில் வழங்­கு­மாறு ஆலோ­ச­னை கூறி யுள்ளதாகவும் நான் அவரிடம் கூறினேன்," என்று தெரிவித்தார்.