தண்ணீர் நிர்வாகம்: தமிழகம் முதலிடம்; சிறப்புமிகு மாநிலம்

2 mins read
4a74e613-12f5-4ecb-85af-4d839de649ad
வேலூர் அருகே பாலாற்றில் மதகுகள் கட்டப்பட்டு இருப்பதால் தண்ணீரைத் தேக்கி நிலத்தடி நீர் உயர வழி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. படம்: தமிழக ஊடகம் -

16 பிரிவுகளில் மொத்தம் 98 விருதுகள்; ஐந்தில் 11ஐ தமிழ்நாடு அள்ளியது

சென்னை: இந்­தி­யா­வில் தண்­ணீர் நிர்­வா­கத்­தைப் பொறுத்­த­வ­ரை­யில் தமிழ்­நாடு தலை­சி­றந்த மாநி­ல­மாகத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு இருக்­கிறது. அந்த மாநி­லம் 2019 ஆம் ஆண்­டுக்­கான தலை­சி­றந்த விருதைப் பெற்று முத­லி­டத்­தைப் பெற்று இருக்­கிறது.

இதோடு மட்­டு­மின்றி, ஐந்து துறை­களில் தேசிய விரு­து­க­ளை­யும் அது குவித்­துள்­ளது. ஆறு­களுக்குப் புத்­து­யிர் அளிப்­ப­தில் இந்­தி­யா­வி­லேயே தலை­சி­றந்த மாவட்­டம், நீர்­நிலை பழ­மைப் பாது­காப்பு, தலை­சி­றந்த நகர உள்­ளாட்சி அமைப்பு, நீர்­நி­லை­களைப் பழமை கெடா­மல் பாது­காப்­ப­தில் புத்­தாக்­கத்­தை­யும் தொழில்­நுட்­பத்­தை­யும் ஆய்­வு­க­ளை­யும் தலை­சி­றந்த முறை­யில் பயன்­ப­டுத்­து­வது, நீர் வளங்­களைக் காக்­கும் வீரர்­கள் ஆகிய ஐந்து பிரி­வு­களில் தமிழ்­நாட்­டிற்கு 11 விரு­து­கள் கிடைத்துள்ளன.

மொத்­தம் 16 பிரி­வு­க­ளின் பேரில் 98 விரு­து­களை ஆண்­டு­தோ­றும் மத்­திய அர­சு வழங்கி வரு­கிறது.

இந்த விருது வழங்­கும் விழா நவம்­பர் 11 மற்­றும் 12ஆம் தேதி­களில் புது­டெல்­லி­யில் நடக்­கும். தமி­ழக அரசு சார்­பில் பொதுப் பணித்­து­றைச் செய­லா­ளர் கே. மணி­வா­சன் அந்த விரு­தைப் பெறு­வார். ஆற்­றுக்­குப் புத்­து­யிர் அளிக்­கும் தலை­சி­றந்த மாவட்­டம் என்ற விருதை வேலூர், கரூர் மாவட்­டங்­கள் பெற்று இருக்­கின்­றன.

நீர்­நிலை பாது­காப்பு விருது தேசிய அள­வில் பெரம்­ப­லூர் மாவட்­டத்­துக்கு கிடைத்து இருக்­கிறது.

தலை­சி­றந்த நகர உள்­ளாட்சி விரு­தைப் பொறுத்­த­வ­ரை­யில் மதுரை மாந­க­ருக்கு இரண்­டா­வது இடம் கிடைத்­துள்­ளது. புத்­தாக்­கம், தொழில்­நுட்­பங்­களைப் பயன்­ப­டுத்தி நீர்­நி­லை­களைக் காத்து தண்­ணீ­ரைச் சிக்­கனப்­ப­டுத்­தும் பிரி­வில் பல நிறு­வனங்­க­ளுக்கு விரு­து­கள் கிடைத்­துள்­ளன.

அதே போல, நீர் வளங்­க­ளைக் காக்­கும் வீரர்­கள் விருதை கோவை குளங்­கள் பாது­காப்பு அமைப்­பின் ஒருங்­கி­ணைப்­பா­ள­ரான மணி­கண்டன், பேரா­சி­ரி­யர் சக்­தி­நா­தன் கண­பதி பாண்­டி­யன், அண்ணா பல்­க­லைக்­க­ழ­கத்­தின் ஒரு துறை ஆகி­யவை வென்­றுள்­ளன.

இதில் தலை­சி­றந்த பள்­ளி­கள் பிரி­வில் காட்­டே­றிக்­குப்­பம் இந்­திரா காந்தி அரசு உயர்­நி­லைப் பள்­ளிக்கு விருது கிடைத்து இருக்­கிறது.

இத­னி­டையே, தமிழ்­நாடு தேசிய அள­வில் முத­லி­டம் பெற்று இருப்­பதைப் பற்றி கருத்து கூறிய அர­சாங்க அதி­காரி ஒரு­வர், விரு­துக்­கான விண்­ணப்­பங்­கள் அறி­விக்­கப்­பட்டதும் தமி­ழக அரசு தான் மேற்­கொண்டு வரும் அனைத்து முயற்­சி­க­ளை­யும் விரி­வாக பட்­டி­ய­லிட்டு விண்­ணப்­பத்­தைத் தாக்­கல் செய்­தது என்று கூறி­னார்.